புத்ரா ஜெயா -மாஸ்ட்ரோ இளையராஜா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களை புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினார்
மலேசியா இந்தியாவிற்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என பிரதமர் அன்வார் இபராகிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்திய இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தியத் திரைப்படங்கள், இசைத் துறை தொடர்பான நினைவுகளை நாங்கள் பரிமாறிக்கொண்டோம் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்
இந்நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னங்களாகத் திகழும் கலை, கலாச்சாரத்தை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்பதை நான் அவரிடம் உறுதிப்படுத்தியுள்ளேன் கூறிய பிரதமர் அன்வார்
இன்று நடைபெறவிருக்கும் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்து. அவரது கலைப்பயணத்தில் இது மற்றொரு வரலாற்றுத் தருணமாக அமையட்டும் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது