Alaioli
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினராக திருமதி நளினா நாயர் நியமனம்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

பெட்டாலிங் ஜெயா ஜன.10.  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினராக திருமதி நளினா நாயர் ராமகிருஷ்ணன் நியமனம் பெற்றார்.  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார், டத்தோ முகமட் அஸிஸீ முகமட் ஷைய்ன் முன்னிலையில், சத்திய பிரமாணம் செய்து பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி சட்ட விதிகள் அடங்கிய ஒப்பந்தக் கடிதத்தில் தாம் கையொப்பமிட்டு நியமனத்தை  ஏற்றுக் கொண்டதாக அவர் பின்னர் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றச் சிறப்புக் கூட்ட அறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் பேசிய நளினா நாயர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். இந்தப்பதவி நியமனம் மூலம் ஜனவரி 2026 தொடங்கி வரும் டிசம்பர் 2027 வரை ஈராண்டுகள் மாநகர் மன்ற உறுப்பினராக சேவையாற்ற விருப்பதாக அவர் கூறினார்.   


பதவி ஏற்பு விழாவில் விடுப்பட்டுள்ள   தெரிவு செய்யப்பட்டுள்ள மற்ற மாநர் மன்ற உறுப்பினர்கள் பிறிதொரு நாளில் அழைக்கப்பட்டு பதவி பிரமாண சடங்கில் பங்கேற்பர் என்று நளினா நாயர் அலை ஒளியிடம் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News