Alaioli
பினாங்கில் புகழ்பெற்ற கேலி சித்திரக் கலைஞர் அஸ்மி ஹுசேன் அகால மரணம்!

பினாங்கு மார்ச்சு 7 -கேலி சித்திரக் கலையில் ஆழமாக வேரூன்றி 

அத்துறையில் அபரிமித வளர்ச்சி கண்டு, தனதுத் 

திறனை மேலும் வளர்க்கும் முயற்சிகளில் தீவிர 

ஈடுபாடு காட்டி வந்த இந்திய இஸ்லாமிய ஆடவர் 

அஸ்மி ஹுசேன் (வயது 40)  நேற்று மாலையில், 

திடீர் நெஞ்சு வலியால் அகால மரணமடைந்தார்.


     மலேசிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தி 

மலேசிய நாட்டவர்களை மட்டுமல்லாது அயல் 

நாட்டவர்களையும்  தன்வசம் ஈர்ப்பதில் வெற்றி 

கண்டிருந்த அஸ்மியின் திடீர் மறைவு எண்ணற்ற 

பலரை மீளாத் துயரில் ஆழ்த்தியிருப்பது 

குறிப்பிடத்தக்கது.


      கேலி சித்தரக் கலையின் நுட்பங்களை 

நன்கு அறிந்திருந்த அஸ்மி, அத்துறையின் மீதான 

மிகுந்த நாட்டத்தாலும் அளவிடற்கினிய 

ஆர்வத்தாலும் இளம் வயதிலேயே அக்கலையை 

திறம்படப் பயின்று, வெளியுலகிற்கு தனது 

ஆற்றலை நன்றே புலப்படுத்தி, அயரா உழைப்புடன் 

புகழேணியில் நின்றிருந்த அஸ்மி  என்ற அந்தக் 

கலைஞனின் மறைவு பலரையும் இங்கு அதிர்ச்சியில் 

உறைய வைத்திருக்கிறது.


     நேற்று முன்தினம் மாலை சுமார் 6.00 மணியளவில்

இங்குள்ள கம்போங் மெலாயு ரமலான் உணவுக்

கடைகளுக்கு தனது மனைவி மற்றும் இரண்டு

பிள்ளைகளுடன் அவர் சென்றிருந்தபோது, தனக்கு

நெஞ்சு வலிப்பதாக, தனது மனைவியிடம் அவர் 

கூறியதக் கேட்ட மாத்திரத்திலேயே அவரும் 

உடனடியாக மருத்துவமனைக்கு போகலாம் என்று

பணித்திருக்கிறார்.


    ஆனால் அஸ்மி மருத்துவமனை வேண்டாம்

என்றும் அருகிலிருக்கும் ஏதாவதொரு கிளினிக்கு

செல்லலாம் என்று கூறி, குடும்பத்தினருடன் அருகில்

பார்லிம் பகுதியிலுள்ள ஒரு கிளினிக்கிற்கு காரை

செலுத்தியிருக்கிறார். கிளினிக் எதிர்ப்புறமாக 

இருந்ததால் காரை ஓரமாக நிறுத்தி விட்டு, சாலையை

கடக்க முயன்ற வேளையில், வலி மிகுதியால் தனது

நெஞ்சைப் பிடித்தவாறு கீழே சாய்ந்திருக்கிறார்.


   இதனைக் கண்ட அவரது மனைவி அதிர்ச்சியில்

ஓடோடி வந்து அவருக்கு உதவிய வேளையில் அருகில்

நின்றிருந்த சிலர் உடனடியாக அவசர ஊர்தியை 

அங்கு வரவழைத்திருக்கின்றனர். அவ்வாறே ஊர்தியில்

அவர் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு

செல்லப்பட்ட வழியிலேயே அவரது உயிர் 

பிரிந்திருக்கிறது

       

        ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு முன்னர் 320  கேலிச் 

சித்திரங்களை 24 மணி நேரத்தில் வரையும் சாகசச்

செயலை அவர் நிகழ்த்தியபோது, வெறும் 40 

நிமிடங்களை மட்டுமே இளைப்பாறுவதற்கு கால 

அவகாசமாக எடுத்துக் கொண்டு தனது இலட்சியத்தை 

ஈடேற்றுவதில் வெற்றி கண்டவர் என்பதும், அதனைத் 

தொடர்ந்து உலகளாவிய நிலையில் சாதனை 

நிகழ்த்துவதற்கும் அஸ்மி தன்னை ஆயுத்தப்படுத்தி, 

அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வந்ததும்

இங்கு குறிப்பிடத்தக்கது.


24 மணி நேரத்தில் சாகசம் புரியும் பொருட்டு 

அஸ்மி தனது முயற்சியில் களமிறங்கியிருந்தபோது, 

பினாங்கு முஸ்லீம் லீக் தலைவர் டத்தோ ஹாஜா 

நஜ்முதீன் மற்றும் பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் 

சங்கத் தலைவர் நசீர் முகைதீன் ஆகிய இருவரும் 

அவருக்கு உற்சாகம் அளித்து ஊக்க மூட்டியதுடன், 

அவரின் தொடர் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கப் 

போவதாக உறுதியளித்திருந்தார்

Post Image

Leave a Comment
Trending News