இலக்கணம் அறிந்தவர் தலைக்கனம் உடையோர்
இக்கூற்றினை உடைப்போமா ஆம் வாருங்கள் பைந்தமிழ் இலக்கணம் அறிவோம்...
அனைவரும் அறிந்திட்டால் தலைக்கனம் உடையும் அல்லவா அறிந்தவர் தவறாக எண்ணல் வேண்டாம். அறியாதவர் என்னோடு நடை போடலாம்...
இலக்கணம் ஐந்து வகைப்படும்.
எழுத்து. சொல். பொருள். யாப்பு (கட்டமைப்பு). அணி.
இனி பார்ப்போம் மா....
1) எழுத்து
******
முதலெழுத்து - 30
சார்பெழுத்து - 10
2) சொல்
****
எழுத்துக்களின் கூட்டுத்தொகை சொல்...
3) பொருள் (ஒழுக்கம்)
**********
அகப்பொருள் (அகத்திணை) - 7
1) கைக்கிளை
2) பெருந்திணை
அன்பின் ஐந்திணை
3) குறிஞ்சி
4) முல்லை
5) மருதம்
6) நெய்தல்
7) பாலை...
புறப்பொருள் (புறத்திணை) - 12
1) வெட்சி
2) கரந்தை
3) வஞ்சி
4) காஞ்சி
5) உழிஞை
6) நொச்சி
7) தும்பை
😎 வாகை
9) பாடாண்
10) பொதுவியல்
11) கைக்கிளை
12) பெருந்திணை...
4) - யாப்பு (கட்டுதல்)
********
6 - வகைப்படும் அவை
1) எழுத்து - தமிழ்
2) அசை - கட்டுதல். நேரசை -நிரையசை..
3) சீர் - குறள் 7 சீர்கள்
4) தளை - சீர்களால் கட்டமைப்பது
5) அடி - ஈற்றடி வெண்பா
6) தொடை - 1.எதுகை. 2.மோனை. 3.இயைபு. 4.முரண்...
1) எதுகை - இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
2) மோனை - முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
3) இயைபு - மாயை சாயை
4) முரண் - (இன்பம் துன்பம்)(இரவு பகல்)
5) அணி
*****
அணிகலன் அழகு சேர்ப்பது...
புரிந்தால் நீரும் வாத்தி ( 01)
ஞாயிறு தோறும் தொடர்வோம்...