Alaioli
பினாந்தி ஶ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக, ரத ஊர்வலம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. மாலை 5.00 மணிக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரதம், சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பளித்தது.
6 ஜோடி காளை மாடுகளுடன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ரதம், பக்தர்கள் பக்தி உணர்வுடன் கலந்து கொண்ட நிலையில், அமைதியாகவும் இனிமையாகவும் ஊர்வலமாக நகர்ந்தது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டதாக ஆலய செயலாளர் திரு. பாலன் நம்பியார் தெரிவித்தார்.
ஊர்வலத்தின் ஓர் அங்கமாக, அர கூட பகுதியில் அமைந்துள்ள ஓரியன்டல் ரியாலிட்டி சொத்துடமை மற்றும் வீடு விற்பனை மையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டியின் தலைமையில், ஆலய ரதத்திற்கு சிறப்பு அரச்சனை மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நிறுவன பணியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரகாட்டம் பாரம்பரிய முறையில் இடம் பெற்றதோடு, நாதஸ்வர இசையின் மங்கள ஒலி முழங்கியதை குறிப்பிட வேண்டியது முக்கியம்.
இதையடுத்து, ஓரியன்டல் ரியாலிட்டி நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. சங்கர் முனியாண்டி, “எங்கள் நிறுவனம் பல வீடமைப்பு திட்டங்களில் பணியாற்றி வருகிறதுடன், சலுகையான விலையில் வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு பக்தி மற்றும் பாரம்பரியத்தின் மகத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் வகையில் அமைந்தது.
Pulau Jerjak
Special prayers held at Deva Sri Siva Subramaniar Mathuraveeran Temple on Pulau Jerejak.
ஜொகூர்
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நிறைவு
ஜொகூர்
ஜொகூர், பொந்தியானில் வெள்ளத்திற்கான அறிகுறி- தீயணைப்புத்துறை விரிவான கண்காணிப்பு.
தெலுக் இந்தான்
தெலுக் இந்தான் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தெலுக் இந்தான்
அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலயத்திற்கு ரிம 82,640.00 மானியம் வழங்கினார் ஙா கோர் மிங்
கோலாலம்பூர்
மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பிரிவின் பட்டமளிப்பு பாராட்டு விழாவில் டான்ஶ்ரீ குமரன் பேச்சு
கூலிம்
தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கை: ஆசிரியர் மதன் பாஸ்கரனின் கல்விச் சாதனை
ஜொகூர்
Jemputan Ke Majlis Penyerahan Bantuan Kasih Johor 2.0 Untuk Warga DUN Tenggaroh