Alaioli
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல்  பல்கலைக்கழகத்தின் (உப்சி) வளர்தமிழ் மன்ற ஏற்பாட்டில் நாடகச்சுடர் போட்டி 2025

தேசிய அளவில் மாபெரும் திருக்குறள் அடிப்படையிலான நாடகங்கள் அரங்கேற்றம்

கடந்த சனிக்கிழமை உப்சி வளர்த்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில்

நாடகச் சுடர் போட்டியானது உப்சி வளாக ஒத்திகைத் திரையரங்கத்தில்  சிறப்பாக அரங்கேறின.

இப்போட்டி உப்சி தமிழ்ப்பிரிவுத் தலைவர், இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா,  உப்சி வளர்தமிழ் மன்ற மதியுரைஞர் முனைவர் இளங்குமரன் சிவநாதன் ஆகியோரின் ஆலோசனையால் சிறப்பாக நடந்தேறின.


 உப்சி வளர்தமிழ் மன்றத் தலைவர் செல்வி சத்தியமலர் பரமசிவன்,  அவர் தம் செயலவையினரின் அயராத முயற்சியினால் இந்நாடகங்கள் எவ்வித தங்கு தடையுமின்றி சிறப்பாக நடந்தேறின.

இப்போட்டியில் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகம்,  ஈப்போ வளாகம், சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம், மலேசிய பஹாங் மாநிலப் பல்கலைக்கழகம், உப்சி   பல்கலைக்கழகம் போன்ற உயர்நிலைக் கல்விக் கூ டங்களிருந்து இருந்து மொத்தம் பத்து குழுக்கள்  பங்குப்பெற்றன.

இப்போட்டிக்கு நீதிபதிகளாக ஆஸ்கார் விருதும் கோல்டன் குளோப் விருதும் பெற்ற முதல் மலேசிய திரைப்படத்தின் மூத்த நடிகர் திரு திவாகர் சுப்பையா அவர்களும் 

தொலைக்காட்சி தொகுப்பாளர், வீடு புரொடக்ஷனின் உரிமையாளர் 

திரு டேனிஷ்  குமார்  ரகுபதி அவர்களும், பூச்சாண்டி திரைப்படத்தின் இயக்குநர் திரு 

திரு.விக்கினேஸ்வரன் கலியபெருமாள் அவர்களும் கலந்து கொண்டு மதிப்பெண்கள் வழங்கினர்.


முதலாம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் கழகத்தைச் சேர்ந்த வேதிக்கனல் குழுவினரும் இரண்டாம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் ஈப்போ வளாக  நிழல்வெளி குழுவினரும் மூன்றாம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு  பைனூன் வளாகத் துளிரும்  துடிப்புகளும் நான்காம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வளாக அரங்கவில்லுகள் குழுவினரும் ஐந்தாம் நிலையில் சுல்தான்  சைனல் அபிடின் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த செந்தமிழ்  திரைமன்றம் ஆகிய குழுவினரும் வென்று வாகை சூடினர்.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News