மலேசிய வானொலி 6 (Radio 6) என்ற தமிழ்ச்சேவையில் பணியாற்றிய எஸ். வைரகண்ணு, ஒரு முக்கியமான நிகழ்ச்சி வழங்குநராகவும், திறமையான கதையாசிரியராகவும், மர்மக் கதைகளின் மன்னனாகவும், புகழ் பெற்ற ஆளுமையாக விளங்கியவர்.
1970களில் தொடங்கி 1990களின் பிற்பகுதி வரை, வாரந்தோறும் ஒலிபரப்பான அவரது மர்மக் கதைகள், மலேசியத் தமிழர்களிடையே வியப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தியவை.
மர்மக் கதைகளின் மையப்புள்ளியாக திகழ்ந்த இவர்,
“ஒரு மர்மக்கதை” என்ற வாராந்திர நிகழ்ச்சியின் மூலம் எஸ். வைரகண்ணு புகழின் உச்சிக்கு சென்றார். ஒவ்வொரு கதையையும் இசை, (சவுண்ட் எஃபெக்ட்) மற்றும் பாவனைக்கேற்ற குரல் மாற்றங்களுடன் தந்த அவரது ஒலி நாடகம், வானொலி நேயர்களின் மனதை கவர்ந்து இழுத்தது. அவரது குரலில் இருந்த வெளிப்பாடு, கதையினுள் கொண்டு செல்வதற்கான தனித்திறமை மற்றும் சுயமாற்றங்களால் அந்தக் கதைகள் வானொலியில் ஒரு அனுபவமாக மாறின.
கதையின் உள்ளடக்கத் தனிச்சிறப்புகள்
எஸ். வைரகண்ணுவின் எழுத்துப் பாணி மிகவும் தனித்துவமானது. அவரது கதைகளில் திகில், ஆவி சம்பவங்கள், மர்மம், மனித மனோவியல் ஆகியவை நுட்பமாக பின்னிப் பிணைந்திருந்தன. சில கதைகள், நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. அவரது கதைகள், ஒரு பக்க வாசிப்பைப் போல அல்லாமல், ஓர் உயிரோட்டமுள்ள கலைநிகழ்வாக ஒலிக்கொண்டிருந்தன.
பண்பாட்டு தாக்கமும் மரபு இவரின் இயல்பு நிலையாக கொண்டவை.
மலேசிய தமிழ் வானொலி பண்பாட்டில் எஸ். வைரகண்ணு ஆரம்பித்த மர்மக் கதைகள் ஒரு தனிச்சுவடாக இருந்தன. அவரின் நிகழ்ச்சிகள் தமிழ் வானொலியின் அரிய பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன. இன்று கூட, YouTube மற்றும் பிற இணைய தளங்களில் அவரது ஒலிப்பதிவுகள் பகிரப்பட்டு வருவதும், பலரும் அவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு நினைவுகளைக் குளிர்ச்சியடைவதும் அவரது நீடித்த தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன.
எஸ். வைரகண்ணு போன்ற கலைஞர்களின் பங்களிப்பு, வானொலியின் ஒரு காலத்தைத் திறம்படப் பதிவுசெய்து வைத்திருக்கிறது. மர்மமும் மகிழ்ச்சியும் கலந்த அவரது கதைகள், இனி வரும் தலைமுறைகளுக்கும் மரபாக எட்டும் என்பது உறுதி.