Alaioli
புக்கிட் மெர்தாஜா மத்திய மாவட்ட முன்னாள் இளைஞர் மற்றும் தலைவர்கள் ஒன்றுகூடல்.முன்னாள் இளைஞர் அமைப்புகளின் சேவை போற்றுதலுக்குரியது.ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய்

பிறை, மே 7-பினாங்கு மாநில முன்னாள் இளைஞர் மன்றம் மற்றும் மத்திய மாவட்ட முன்னாள் இளைஞர் மன்ற தலைவர்கள் சந்திப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நேற்று பிறை எகரோரா தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பினாங்கு மாநில இளைஞர் மன்றத்தின் சார்பில் டத்தோ ஜி.பி. துரைசாமி தலைமையேற்றார். நிகழ்ச்சியின் பேச்சில், இளைஞர் அமைப்பின் வாயிலாக இளைஞர்களுக்குச் சேவையாற்றிய முன்னோடிகளின் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத் தன்மைகள், இன்றைய இளைஞர்களின் வளர்ச்சிக்கான தளங்களை உருவாக்கியுள்ளன என்று அவர் கூறினார்.


நிகழ்ச்சியில் பினாங்கு மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறைக்கான ஆச்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னால் இளைஞர்களின் சேவைகள் இன்றும் தொடர்ச்சியாக இளைஞர் சமூகத்திற்கு வழிகாட்டி வருவதைப் பாராட்டும் விதமாக, அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


மேலும், நிகழ்வின் போது கடந்த காலத்தில் சிறப்பாகச் சேவையாற்றிய இருவருக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை டேனியல் கூய் நேரில் வழங்கினார்.


மாநிலம், தொகுதி மற்றும் கிளை மட்டங்களில் சேவையாற்றிய முன்னாள் தலைவர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டினர்.


இந்திய இளைஞர் அமைப்பைச் சேர்ந்த பினாங்கு இந்து இளைஞர் பேரவை முன்னாள் தலைவர்களான ஆர். ரமணி, ஜெயராமன், குமாரி ரேகா, நாராயணன் கேசவன் உடன் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னாள் தலைவர்களான டத்தோ ஜி.பி. துரைசாமி, டத்தோ செல்வநாதன், பாலன் முனியாண்டி, இராஜசேகரன் மற்றும் சேகர் இராமையா ஆகிவரும் கலந்து சிறப்பித்தனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News