Alaioli
பேராக் மாநில அரசஇன் "சிறந்த  சேவையாளர்" விருதைப் பெற்றார் டாக்டர் தர்ஷினி பாலசுப்பிரமணியம்

ஈப்போ மே 7-பேராக் மாநிலத்தில் பல் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் தர்ஷினி  கே. பாலசுப்பிரமணியம் அவர்ககள்  பேராக் மாநில அரசு விருதளிப்பு விழாவில் “சிறந்த சேவைக்கான விருதை”  (Anugerah Perkhidmatan Cemerlang)பெற்றுப் பெற்றோர்கள் மல்லிகார் பாலகிருஷ்ணன் தம்பதிகளுக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


தமது மகளின் வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி சொல்வதுடன்,இதனால் தங்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வதாக அலை ஒளி ஊடகத்திடம் ஆர்.மல்லிகார் பகர்ந்துகொண்டார்.


பேராக் மாநில அரசால்  வழங்கப்படும் இந்த"அனுகிரஹப் பெர்சிக்மாத்தான் செமர்லாங்" (Anugerah Perkhidmatan Cemerlang)மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த விருதைப் பெற்ற சிறந்த சேவையாளருக்கான விருதை பேராக் மாநிலத்தில் உள்ள ஒரே இந்தியப் பெண் பல் மருத்துவர் (Dentist) டாக்டர் தர்ஷினி பாலகிருஷ்ணன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


டாக்டர் தர்ஷினி பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் மல்லிகார் இராமசாமி பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவையின் செயலாளராகவும்,ஜாலான் பாரு இந்து இளைஞர் இயக்கத்திலும் செயலவை உறுப்பினராகச் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது


அலை ஒலி நியூஸ் சார்பில்  டாக்டர்  தர்ஷினிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.உங்கள் சாதனை இன்னும் பலருக்குத் தன்னம்பிக்கையை ஊட்டட்டும்! 🇲🇾🌟

Post ImagePost Image

Leave a Comment
Trending News