Alaioli
வள்ளலின் வாழ்த்துப் பொன்னாள்...!!

தூரத்துப் பனி களைந்தெழும் தேனிசைப் பொழுதில் ,

தூரிகை நெஞ்சங்கள் நன்றிக் கலவை பூசுகின்றன,

தான்ஸ்ரீ இரமேஸ் – வள்ளல் வேந்தாய் விளங்கும் நாயகன்,

தோழமையின் தீபம் போலே தமிழ்மனங்கள் ஒளிருகின்றன.

தரைநிமிர்ந்து நடக்கிறார், 

தர்மத்தின் செல்வராய்,

தாய்மொழியின் அழகு போல, நயமாகப் பேசிடுவார்.

தொழிலின் தனிநபர் அல்லர், 

தொண்டின் தலைவன் இவர்,

தொட்டிட முளைக்க வைக்கும் தொண்டு விதையாம் இவரது நெஞ்சம்.

அன்பால் கட்டிய கோபுரம், மரியாதையால் பட்டம்,

பாசத்தின் பளிங்காய் அவரைக் காணும் பரிசுகள் பல.

பவனியில் முகம்தான் முன்னே, நெஞ்சில் அமைதி பசுமை,

புகழ் மட்டும் அல்ல, பயனும் பரப்பும் புனித நிழல்.

ஐம்பத்தைந்து வாசலுக்கு அர்ச்சனை செய்து நிற்போம்,

ஆயிரம் ஆசிகளால் அலங்கரிப்போம் இன்று நாளை!

வாழ்க இரமேஸ் வள்ளல், வாழ்க அவர் சேவையின் செழிப்பு,

வாழிய அவர் வழிகாட்டும் ஒளிப் பாதை நூற்றாண்டு!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்,

தான்ஸ்ரீ இரமேஸ் அவர்களுக்கு!!!!

        செ.குணாளன்

Post ImagePost Image

Leave a Comment
Trending News