Alaioli
கிரிக், ஜூன் 9:
கிரிக் அருகே இன்று அதிகாலை நடந்த கோரமான சாலை விபத்தில் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நேரத்தில் மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தும், ஒரு MPV ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் உள்ள 13 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தீவிரமாக காயமடைந்த இரு மாணவர்கள் கிரிக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தனர். இதனுடன், ஏழு மாணவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர நிகழ்வுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு வழங்குவதற்கான உத்தரவையும் உயர் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக, உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் தனது சமூக ஊடகப் பதிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழுமையான உதவியை வழங்கத் தயார் என தெரிவித்தார். மேலும், தேவையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வு, மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டியதற்கான அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.
பந்திங்
உலகில் அறிவியல் சார்ந்த மருத்துவம் மிகைப்பட வளர்ந்துள்ள போதிலும், தனிமனிதரும் அவரவர் சுகாதாரத்தை பேணுதல் அவசியம்; ஜாமாலியா அறிவுரை.
பினாங்கு
பினாங்கு மாநகராட்சியின் ஊழியர் ஒன்றியம் சார்பில் பள்ளிக்கூட உபகரணங்களுக்கான கொள்முதல் பற்றுச்சிட்டைகள்!
பட்டர்வொர்த்
எதிர்கால உலகின் சாவியை ஏந்தும் மாணவர் - கோசா மன்றத்தின் சாதனை முன்னெடுப்பு.
சென்னை
Chennai to Host Enchanting Valentine’s Weekend of Music and Love
பினாங்கு
நிர்வாகத் திறன்மிக்க இளையோர் நியமனதாரர்களுக்கான 2026ஆம் ஆண்டின் வழிகாட்டி நூல் பினாங்கில் வெளியீடு!
ஷா ஆலம்
2123 பேருக்கு பசார் ரமடான் நோன்புப் பெருநாள் சந்தைக்கான பெர்மிட்டுகள் வழங்கப் பட்டுள்ளன; அமிருடின் ஷாரி தகவல்
கோலாலம்பூர்
Selepas Hamzah, MP Machang Wan Ahmad Fayhsal pula dipecat BERSATU
கோலாலம்பூர்
Bersatu pecat Timbalan Presiden Hamzah Zainudin serta merta