Alaioli
பினாங்கு ஆளுநர் தலைமையில் பினாங்கு மாநில  மலேசிய சாரணர் கூட்டமைப்பின் விருதளிப்பு விழா!

பினாங்கு டிசம்பர் 2 பினாங்கு மாநில மலேசிய சாரணர் கூட்டமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான, பினாங்கு சாரணர் மன்னர் சாரணர் நட்சத்திரம், பதக்கம் மற்றும் சான்றிதழ் விருது வழங்கும் விழா மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா துன் டாக்டர் ஹஜி ரம்லி ஙா தாலீப் தலைமையில் இங்கிருக்கும் கொம்தார் கட்டடத்தின் “தி டாப்” உணவக வளாகத்தில் நடைபெற்றது.


பினாங்கு மாநில மலேசிய சாரணர் கூட்டமைப்பின் (PPMNPP) புரவலரான மேன்மை தங்கிய துன் டத்தோஸ்ரீ உத்தாமா ஹஜி ரம்லி ஙா தாலிப், மாநில சாரணர்களின் 23 உறுப்பினர்களுக்கு மன்னர் சாரணர் சான்றிதழ் வழங்கும் விழாவையும், அதன் தொடர்புடைய அமைப்பு இயக்கத்தின் கௌரவத்தை உயர்த்துவதில் தீவிர ஈடுபாடு மற்றும் சிறந்தப் பங்களிப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 386 பெறுநர்களுக்கு நட்சத்திரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.



பினாங்கு மாநில முதல்வர் சௌ கொன் இயாவ் சிறப்புப்பிரமுகராக கலந்து கொண்ட இவ்விழாவில் மாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் அ.ராஜேந்திரனும் தம்பதியரும் பங்கேற்றிருந்த வேளையில், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இதரப் பற்பல தரப்புகளின் பிரதிநிதிகளும் இந்த விழாவில் முக்கிய வருகையாளர்களாக பங்கெடுத்துக் கொண்டனர்.


பினாங்கு மாநில சாரணர் மன்றத்தின் தலைவராக விளங்கும் சௌ இச்சபையில் உரையாற்றியபோது, ஆளுமை மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான ஒரு தளமாக சாரணர் பணியின் பங்கு, எதிர்காலப் பொறுப்புகளைத் தாங்கக் கூடிய மனித மூலதனத்தை உற்பத்தி செய்யும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு ஒத்துச் செல்வதாகவும் இதன் மூலம் மிகவும் இணக்கமான, ஒழுக்கமான அதேவேளையில் முற்போக்கான சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் வலியுறுத்தினார்.



 2025 ஆம் ஆண்டளவில் புதிய திசையின் மூலம், இளைஞர் தலைமைத்துவ பயிற்சிகளின் வாயிலாக பள்ளி மற்றும் சமூக ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் மற்றும் புதிய இலக்கவியல் பொருளாதாரசகாப்தத்தில், சாரணர் இயக்கம் தொடர்ந்து பொருத்தமான செயல்பாடுகளை தக்க வைப்பதை உறுதி செய்வதன் மூலம்,தேசிய உறுப்பினர் எண்ணிக்கையை 500,000 ஆக உயர்த்தும் இலக்கு சாத்தியமாவது திண்ணமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

     

இந்த விழாவில் தேசியச் சாரணர்களின் தலைவரான மேஜர் ஜெனரல் டத்தோ பேராசிரியர் டாக்டர் முகமட் ஜின் பிடின்; பினாங்கு மாநில இளைஞர் விளையாட்டு மற்றும்சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ; உள்ளாட்சி மற்றும் நகரத் திட்டமிடல் துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹிங் மூய் லாய்; சமூக மேம்பாட்டு, நலன் மற்றும் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம்; பினாங்கு மாநில சாரணர்களின் தலைமை ஆணையர் டத்தோ ஹஜி சுல்கிப்ளி கமாருதீன்; மற்றும் பினாங்கு மாநில சாரணர் மன்றத் தலைவர்லீ தூங் லியோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News