Alaioli
சபா மாநிலத் தேர்தலில் ஒரு நாள் ம இ கா போட்டியிடும் காலம் வரும்.சபா சட்டமன்றத்தில் ஒரு இந்தியர் சட்டமன்ற உறுப்பினராக நுழைந்து வரலாற்றை படைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் ம இ காவின் தேசிய உதவித்தலைவர் டத்தோ டி முருகையா கூறினார்.
தீபகற்பத்திலிருந்து பல கட்சிகள் சபா தேர்தலில் போட்டியிடும் நிலையில் வருங்காலத்தில் ம இ காவுன் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக அவர் கோடிக்காட்டினார்.
சபா மாநில ம இ கா பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் டத்தோ டி.முருகையா இதனை நினைவுறுத்தினார்.
இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ம இ காவிற்கு சபாவில் 25 கிளைகள் இருப்பதாகவும் அந்த எண்ணிக்கையை அதிகரிக்குமாறு மாநிலத் தலைவரான பீர் முகமது காடீரை கேட்டு கொண்ட அவர் ம இ கா இந்தியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் சபாவில் சேவையாற்றும் எனவும் கூறினார்.
மேலும்,சபாவிலுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் ம இ காவில் இணையுமாறு கோரிக்கை விடுத்த அவர் இந்தியச் சமுதாயத்திற்கு கல்வி உட்பட சமூக பொருளாதார உதவிகளையுன் ம இ கா தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
பெர்லிஸ் தொடங்கி சபா வரை ம இ கா மாநில பேராளர் மாநாடுகள் நிறைவை எட்டிவிட்ட நிலையில் கட்சியின் தேசிய பொது பேராளர் மாநாடு அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெறலாம் எனவும் குறிப்பிட்டார்.
ஜொகூர்
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நிறைவு
ஜொகூர்
ஜொகூர், பொந்தியானில் வெள்ளத்திற்கான அறிகுறி- தீயணைப்புத்துறை விரிவான கண்காணிப்பு.
தெலுக் இந்தான்
தெலுக் இந்தான் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தெலுக் இந்தான்
அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலயத்திற்கு ரிம 82,640.00 மானியம் வழங்கினார் ஙா கோர் மிங்
கோலாலம்பூர்
மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பிரிவின் பட்டமளிப்பு பாராட்டு விழாவில் டான்ஶ்ரீ குமரன் பேச்சு
கூலிம்
தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கை: ஆசிரியர் மதன் பாஸ்கரனின் கல்விச் சாதனை
ஜொகூர்
Jemputan Ke Majlis Penyerahan Bantuan Kasih Johor 2.0 Untuk Warga DUN Tenggaroh
கூலாய்
ஜொகூர் காசிஹ் வீடு தொடக்கவிழா! டத்தோ’ ஹாஜி ஜாப்னி முகமது ஷுக்கோர் தொடக்கி வைத்தார்