Alaioli
அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதி பினாங்கு மேயருடன் சந்திப்பு!

UNHCR (United Nations High Commissioner for Refugees) எனப்படும்,அகதிகளுக்கான உலகளாவிய பாதுகாப்புக் காவலரின் மலேசியப் பிரதிநிதியானலூயிஸ் ஆபின் என்பவர் நேற்று முன்தினம் பினாங்கு மாநகர் மன்ற மேயர் டத்தோ  அ.ராஜேந்திரனுடன் மரியாதை நிமித்தச் சந்திப்பு நடத்தினார்.

 

இந்தச் சந்திப்பின்போது சமூக அடிப்படையிலான பாதுகாப்புத் தலைவர் டாக்டர் சுசிலா பாலசுந்தரம் மற்றும் மனிதாபிமான விவகாரத் துறைத் தலைவர் அட்லி ஜகுவான் ஆகியோரும் உடன் வருகையளித்து மேயருடனான சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில்,கருத்துப் பரிமாற்றங்களுடன் விவாதம் நடத்தினர்.


பினாங்கில் தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் தொடர்பில் தலைதூக்குகின்ற பிரச்சனைகள் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட வேளையில்இரு தரப்பு ஒத்துழைப்புக்கும் இடையேயான சாத்தியக் கூறுகள் தொடர்பில் அறிவுப் பகிர்வுசமூக ஆதரவு ஆகிய அம்சங்கள் தொட்டும் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறைபரஸ்பர புரிதல் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினர்களின் நல்வாழ்வையும் மேம்படுத்தக் கூடிய முன் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த விவாதக் களம் வாயிலாக ஒரு படிப்பினைக்கு வழிகாணப்பட்டது.


இக்கூட்டத்தில் பினாங்கு மாநகராட்சியின் பிரதிநிதிகள், பொறியியல் துறை இயக்குநர் சியா சின் கூய்மேம்பாட்டுத் திட்டமிடல் இயக்குநர் முகமது பஷீர் சுலைமான்பாரம்பரியப் பாதுகாப்புத் துறை இயக்குநர் லீ திட் குன்நகரம் மற்றும் கிராமப்புறத் திட்டமிடல் அதிகாரி லிம் சூய் பிங் ஆகியோருடன் பொதுத் தொடர்புத் துறையின் உதவி இயக்குநர் சுபாஷினி தவமணியும் கலந்து கொண்டார்.     

Post ImagePost Image

Leave a Comment
Trending News