Alaioli
பத்து பெரிங்கி தேவி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய 151 ஆம் ஆண்டு திருவிழா 40 பி40 தரப்பு மக்களுக்கு  பொருளுதவி வழங்கப்பட்டது

பத்து பெரிங்கி, ஜூலை 30
பத்து பெரிங்கி தேவி ஸ்ரீ மகா பத்ரகாளியம்மன் கோவிலின் 151வது ஆண்டு தீமிதி திருவிழா விழா  அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


இந்த திருவிழாவின்,பினாங்கு மாநில துணை முதலமைச்சர்  ஜக்தீப் சிங் டியோ அவர்கள்  நேரில் வருகை தந்து  சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

கோவில் தலைவராக உள்ள திரு சுகுமாரன் அப்பு அவர்கள் கூறுகையில்,துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ அவர்களின் வருகை நம்முடைய சமய நிகழ்விற்கும் சமூக சேவைக்கும் அளித்த பெரும் ஆதரவாகும் என்றும் அவருடைய அன்பும், சமூகத்திற்கு அவர் வழங்கும் சேவையும் நம்மை பெருமைப்படுத்துகின்றதாக தெரிவித்தார்

இதனிடையே ஆலய திருவிழாவின் போது அன்று  கோவில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உதவிப் பொருட்கள். வழங்கும் நிகழ்சசியல்  பி 40 குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கும் மூத்த குடி பெருமக்களுக்கும் மளிகைப் பொருட்கள் மற்றும் சேலைகள் உள்ளிட்ட உதவிகளை 40 பேருக்கு வழங்கப்பட்டதாக ஆலய தலைவர் சுகுமாறன் அப்பு மேலும் தெரிவித்தார்.

மேலும்,துணை முதலமைச்சர்  ஜக்தீப் சிங் டியோ அவர்கள் கோவிலுக்காக நிதியுதவியையும்  வழங்கி தனது தாராள மனப்பான்மையை வெளிப்படுத்திய அவருக்கு  கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News