Alaioli
கோலாலம்பூர், மே 10 –
இன்று அதிகாலை சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக 15 மாணவர்கள் உயிரிழந்த சோககரமான விபத்தினால் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க உயர்கல்வி அமைச்சகத்திற்கு வழிகாட்டுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக தனது இரங்கலைத் தெரிவித்து, “இந்தக் கவலையூட்டும் பேரழிவு, நம்மில் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கையாகவும், வருங்காலத்திற்கான விழிப்புணர்வாகவும் அமைய வேண்டும். எதையும் அவசரப்படுத்தாமல், எப்போதும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். உங்கள் உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றவை. அதற்கு மாற்று எதுவும் இல்லை,” என அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாணவ வாழ்க்கையின் பயணத்தில் ஏற்படும் இத்தகைய பேரழிவுகள், பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்துகின்றன. எனவே, அனைவரும் தங்கள் பயணத்தில் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது.
சிலாங்கூர்
ஏழு தினங்களாக மின்தடையால் காயு ஆரா அடுக்ககக் குடியிருப்பாளர்கள் அவதி, இப்போது குடிநீரும் இல்லை; என்ன கொடுமை என சமூக ஆர்வலர் பரம்சிவா கேள்வி
கோலாலம்பூர்
அரசின் மேற்பார்வையில் செயல்படும் 1,781 பெர்பாடுவான் பாலர் பள்ளிகள் தரம் மேம்படுத்தப் பட்டுள்ளன; யுனேஸ்வரன் தகவல்.
பினாங்கு
Kerajaan Pulau Pinang Lancar Dana Pembangunan Belia (DPB) 2026 Perkasakan Potensi Anak Muda
பினாங்கு
பினாங்கில் சமூக ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கத்தில் மாநகர் மன்ற உறுப்பினர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!
புக்கிட் தாம்பூன்
சுங்கை பக்காப் அருள் மிகு கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகதில் கலந்துகொள்ள ஆலய நிர்வாகம் அழைப்பு
பினாங்கு
மலேசிய இந்து சங்கம் குளுகோர் வட்டாரப் பேரவை அனைத்து வட்டார கோவில்களுக்கும் சந்திப்புக் கூட்டம்
பந்திங்
நீண்ட வரலாற்றைக் கொண்ட கேரித் தீவு, மாணிக்க வாசகம் இந்தியர் கிராமத்திற்கு , கிராம அந்தஸ்தைப் பெற மாவட்ட நில இலாகா பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கை; ஹரிதாஸ் ராமசாமி தகவல்
கோலாலம்பூர்
அடுத்த ஆண்டில் முதலாம் வகுப்பில் கல்வி பயில ஆறு வயது மாணவர்கள் 351,789 பேர் பதிவு; துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ அறிவிப்பு.