Alaioli
சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு ஜாவி முருகன் ஆலயத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.டத்தோ மு.இராமசந்திரன்

நாடு முழுவதும் சித்திரா பெளர்ணமியை முருகன் திருத்தலங்ரகளில் சித்திரா பெளர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது அதனை முன்னிட்டு,செபராங் பிறை தென் மாவட்டம்,ஜாவியில் அமைந்துள்ள அருள் மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தில் இன்று காலை தொடக்கம் சித்திரா பெளர்ணமி விழா கோலாகலமாகத் தொடங்கியது. 


இதனிடையே சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்திப் சிங் அவர்களின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ மு.இராமசந்திரன் மற்றும் அவரின் குழுவினரின் சார்பாக ஆலயத்துக்கு வருகையளித்த பக்தர்களுக்குக் காலை உணவுதனை வழங்கி ஆதரவளித்தனர். 


காலையில் அதிகமான பக்தர்கள் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு தென்டாயுதபாணி ஆலயத்திக்கு வருகை அளித்தனர்,பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது என டத்தோ மு.இராமசந்திரன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் டத்தோ தேவேந்திரன்,தொழிலதிபர் விஸ்வநாதன்,சுவாமி சொரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் பினாங்கு மாநில அலை ஒளி சமூக இயக்கத்தின் தலைவர் பா.த.மகலிங்கம் உள்ளட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News