Alaioli
*கிள்ளான் மருத்துவமனையில் தீ ஏற்பட்டது – நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்*

கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் இன்று மாலை ஏற்பட்ட தீயால், அப்பகுதியில் இருந்த நோயாளிகள் அவசரகால நடவடிக்கையின் கீழ் வெளியேற்றப்பட்டனர்.


சம்பவம் மாலை 5 மணிக்கு நடைபெற, மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர்.


சிலாங்கூர் மாநில தீயணைப்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இந்த தீ விபத்து சிவப்பு மண்டலத்தில் உள்ள ஒரு சுவிட்சில் ஏற்பட்டது என்பதை ஆரம்பக்கட்ட ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.


அத்துடன், இச்சம்பவத்தில் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சிகரமான செய்தியாகும்.

Leave a Comment
Trending News