Alaioli
மணல் தேக்கும் முழுப்பனிக்காலையிலும்
கரும்புளி சுவரின் பிழம்படித்த ஒளியில்
வியர்வை சிந்திய அந்த கைதான்..,
இப்போது வானைப் பார்த்துக் கை கட்டி நிற்கிறது!

எங்கே தவறு செய்தான் அவன்?
தத்துவமாய் உழைத்ததற்கா?
தன்ஆயுள் முழுவதும் திருச்சீலையாக
தந்தையின் கடன் மிச்சத்தைக் கழிப்பதற்கா?

துப்பாக்கியின் நுனியில்
சட்டம் பேசுகிறது —
ஆனாலும் சட்டம் எங்கே?
சட்டம் சுடுகிறது!
முகக்கவசத்தில் மறைந்த அதிகாரி,
மறையாமல் மிரட்டுகிறான்.
உணர்வு இழந்த இரும்பு கம்பிகளுக்குள்
மனித உரிமைகள் உருண்டு விழுகிறது.

மனிதம் தேடி வந்த அதிகாரிகள்,
மனிதனை மிரட்டி விட்டனர்.
நீதி காக்க வந்த நெறியாளர்கள்,
நெஞ்சை ஈரம்செய்தனர்.
இது விசாரணையா?
இல்லை, இது வெறும் மிரட்டலோ?
வியாபாரிகள் தவறுகள் செய்திருந்தால்
பணியாளர்களை ஏன் சிதைக்கின்றீர்கள்?

சீல் வைத்தீர்கள்..,
ஆனாலும் செயல்வீரம் விட்டுச் சீறுகிறது மக்கள் மனம்,
“மடானியின் முகமா இது?” என
நாடே கோபத்தில் கனல் கொள்கிறது.
ஏன் இந்த அவமதிப்பு?
ஏன் இந்த அடக்குமுறை?
வெறும் வேலைக்காரன் தான் என்று
விலங்காய் நடத்துவது எந்த நீதியின் கீழ்?

காலம் இதை மறந்தாலும்
கண்ணீர் சொதுங்கும் அந்தக் கைகளில்
புகார் பதிந்திருக்கும்…
ஒரு ஜனநாயகத்தின் குருதி கறைபடிவம்.
செ.குணாளன்
சிலாங்கூர்
இறைச்சி வெட்டும் கத்தியால் போலீஸ் அதிகாரியைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆடவருக்கு ரிம.9,100 அபராதம்
கோலாலம்பூர்
Mi segera kini berperisa nasi lemak
ஜொகூர்
Gangguan bekalan air berjadual di daerah Johor Bahru, Kota Tinggi dan Pontian
கோலாலம்பூர்
Piala Thomas 2026: Malaysia 'kuda hitam' di Denmark, kata Zii Jia
கால்பந்து
Piala Dunia 2026: FIFA desak Donald Trump tangguh operasi ICE, bimbang cetus kekacauan
கோலாலம்பூர்
Himpunan GARAH: Anwar, kerajaan dan lima lain diarah fail pembelaan sebelum 21 Mei depan
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்
புத்ராஜெயா
Sindiket pemalsuan dokumen pekerja asing lumpuh, dalang utama warga Nepal turut dicekup Imigresen