Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
செமினி, ஏப்ரல் 17- செமினி சென்ட்ரலில் அமைந்துள்ள பன்முகத் தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் இலக்கியச் சோலையில், சிலாங்கூர் மாநில அளவில் இருக்கும் 3 தமிழ்ப் பெண்மணிகள், நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 19.4.2026 மாலை 5.30 மணியளவில் நடைபெற விருக்கும் இலக்கிய விழாவில் தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவிருக்கின்றனர்.

இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னெடுப்பில், செமினி இலக்கிய விழா ஏற்பாட்டுக் குழுவினர் வழி நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் ஆர் ஆர் ஐ தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி புஷ்பராணி கிருஷ்ணன், கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் திருமதி புஷ்பா நாகையா வெங்கடேசன், கோல சிலாங்கூர் கெ அடிலான் மகளிர் அணியின் வட்டாரத் தலைவி திருமதி ஜெகதீஸ்வரி வேலு ஆகிய மூவரும் விருதுகளைப் பெறவிருக்கின்றனர்.

செமினி சிற்றூரில், 3- 1, ஜாலான் செமினி சென்ட்ரல் 6, சென்ட்ரல், செமினி என்ற முகவரியில் அமைந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் விருது பெறுவோர் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்ளும்படி இந்த நிகழ்ச்சியின் விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.- Alaiolinews

சிலாங்கூர்
ஆலயத் தூண் சாய்ந்து மரணமுற்ற சீன மாணவிக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கண்ணீர் மழையில் இறுதி அஞ்சலியுடன் வழி அனுப்பினர்
பேராக்
Perak terima 29,310 permohonan pendaftaran Tahun Satu bagi sesi 2027
கெடா
57 anggota PGA digerakkan ke 13 stesen minyak 'hot spot' di sempadan Malaysia-Thailand elak ketirisan bahan api subsidi
சிலாங்கூர்
செமினி, இனிய நந்தவனம் இலக்கிய விழாவில் , சிலாங்கூரில் 3 பெண்மணிகள் தமிழ்மாமணி விருது பெறுகின்றனர்
திருக்கோவில்
நூறாண்டுகள் பழைமையான ஜூக்ரா கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்திர தீமிதி திருவிழா
ஜொகூர்
ஊடகப் பணியாளர்களுக்கு 300 லிட்டர் ரோன்95 பெட்ரோல் ஒதுக்கீடு தொடர வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை.
பேராக்
வெற்றிக்கு வித்திடும் சூரியசக்தி மின்சாரம் குறித்து சிதம்பரம்பிள்ளை பள்ளி ஆர்வம்..!
கிளாந்தான்
Sindiket kaut untung RM15,000 satu kepala seludup PATI tersungkur, 37 warga Myanmar ditangkap PGA