Alaioli
ஹாஜி ஹஸ்னுல் மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்

எஸ்.எஸ்.மணிமாறன் 

பந்திங், ஏப்ரல் 29 - துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின், மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் பெற்றார். இவர் கடந்த காலங்களில், மோரிப் சட்ட மன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்துள்ளார்.


அதே வேளையில், பந்திங் வட்டாரத்தில் நன்கு பிரபலமான தாமான் டெலிமா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரான லாவ் கோக் ஹூவா மோரிப் சட்ட மன்ற சீன வம்சாவளியினரைப் பிரதிநிதித்து சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் வாயிலாக சிறப்பு அதிகாரியாக நியமனம் பெற்றார்.


இந்த நியமனம் கடந்த 1.2.2026 முதல் நடப்புக்கு வருவதாக லாவ் கோக் ஹூவா அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பொறியியலாளர் இஸாம் ஹஷிம் இருவரையும் மோரிப் சட்ட மன்றத் தொகுதி சிறப்பு அதிகாரிகளாக நியமித்துள்ளார்.


மோரிப் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலக உயர் அதிகாரி கைருல் நிஜாம் தோஹார் நியமனக் கடிதங்களை எடுத்து வழங்கி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.-Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News