Alaioli
நாடெங்கும் அரசு சுகாதார கிளினிக்குகளில் நீரிழிவு மையங்கள்;   டாக்டர் சுல்கிப்ளி அமாட் அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோலாலம்பூர். மார்ச் 3. நாடெங்கும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அரசு சுகாதார கிளினிக்குகளில் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள நீரிழிவு மையங்கள் படிப்படியாக அமையப்பெறும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அமாட் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


சுகாதார அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் 33 நீரிழிவு மையங்களில் இதுவரை 28 நீரிழிவு மையங்கள் செயல்படத் தொடங்கியதாக அவர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். புறநகர்ப் புறங்களிலும் கிராமப் பகுதிகளிலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் முதுமையில் இருக்கும் நோயாளிகள் நகர்ப் புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்வதில் சிரமத்தை எதிர் நோக்கக் கூடும் என்பதால் சுகாதார அமைச்சு இந்த உடனடி ஏற்பாட்டைச் செய்துள்ளதாக டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

Leave a Comment
Trending News