Alaioli
சிலாங்கூர் மாநில இல்திஷாம் புரோகிராம் பந்துவான்  திட்டத்தில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு உதவிகள் முன்னெடுக்கப்படும்= பாப்பா ராய்டு அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம். சிலாங்கூர் மாநில  இல்திஷாம் புரோகிராம் பந்துவான் திட்டத்தின் வாயிலாக வசதி குறைந்த ஏழை மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை முன்னெடுத்து வழங்கப்படும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


தகுதி பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுக்கான உதவிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் கூறினார். தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் இல்திஷாம் பந்துவான் திட்டத்தில் மனு செய்வதற்கு கடந்த 15.4.2026 முதல் 15.5.2026 வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளதால் தாமதம் செய்யாமல் விரைவாக மனு செய்யும்படி பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். அதே வேளையில், பந்திங் சட்ட மன்ற மக்கள் மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மாணவர்களும் தங்களது எதிர் கால நலன் கருதி மனு செய்யும்படி பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Comment
Trending News