Alaioli
மாநில அரசின் பந்துவான் புளூபிரிண்ட் திட்ட நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்து பாப்பா ராய்டு விளக்கம்.

 எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம். ஏப்ரல் 22.  சிலாங்கூர் மாநில அரசின் பந்துவான் புளூபிரிண்ட் திட்டமும் செயல்பாடுகளும் பி 40 பிரிவின் கீழ் எப்படி செயல்படுகின்றன, அதன் பயன்பாடுகள் வசதி குறைந்த ஏழை மக்கள் மத்தியில் எவ்வாறு பயனளிக்கின்றன, அதைச் செயல்படுத்தவும் முறையாகக் கண்காணித்து தகவல்களை உடனுக்குடன் மாநில அரசு செயலகத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் குறித்தும் மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான்,


மாநில சட்ட மன்றத்தின் 2026 ஆம் ஆண்டின் 15 ஆவது சட்ட மன்ற க்கூட்டத் தொடரில் எழுத்துப்பூர்வமாக த் தயாரித்த தகவலை வாசித்து விளக்கம் அளித்தார். போர்ட் கிள்ளான் சட்ட மன்ற உறுப்பினர் துவான்  அஸ்மிஷாம் ஷாமான் ஹூரி என்பவர் எழுப்பிய கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளிக்கும் வகையில் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு, அவருக்கு  விளக்கம் அளிக்கும் வகையில் எழுத்துப்பூர்வமாக விவரித்தார். மாநில சட்ட மன்றக் கூட்டத் தொடர் கடந்த 20.4 .2026 இல் தொடங்கி வரும் 4.5.2026 இல் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment
Trending News