Alaioli
செபராங் பிறை ஜூலை 30-
வட செபராங் பிறை பகுதியில் அமைந்துள்ள லாட் 1190-இல் அவசர கால அணுகல் பாதை மூடல் மற்றும் கட்டிட கட்டமைப்புகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு புகார்களை அடுத்து, சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் இணைந்து நேரில் பார்வையிட்டதுடன் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் உடன் கலந்துக்கொண்டார்.

இந்த தள பார்வையில், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் திரு. லிங்கேஸ்வரன் சார்மர், வட செபராங் பிறை மாவட்ட மற்றும் நில அலுவகம், செபராங் பிறை மாநகர் மன்ற மதிப்பீட்டுத் துறை, அமலாக்க இயக்குநரகம், உரிமத் துறை, கட்டிடத் துறை, மற்றும் நகராட்சி சேவைகள் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான கட்டிட உரிமையாளர்கள், அந்த பகுதியிலுள்ள அவசர பாதை மூடப்படுவதால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அணுகலில் தடை ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தனர். தேடல் நடவடிக்கையில், பாதை ஒரு பின் வழியாக இருப்பதோடு, அதற்கான நிலம் தனியாருக்குச் சொந்தமானது என்றும் கண்டறியப்பட்டது.
இந்த வருகையின் முக்கிய நோக்கங்கள்:நிலத்தின் உரிமை மற்றும் நிலைமை குறித்து மாவட்ட மற்றும் நில அலுவகத்திடம் இருந்து உறுதி செய்யல்,மூடப்பட்ட பாதை மற்றும் கட்டமைப்புகளுக்கு செபராங் பிறை மாநகர் மன்றம் கட்டிடத் துறையிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதா என ஆய்வு செய்தல்,பொதுமக்கள் பாதுகாப்பும், சட்டபூர்வமான கட்டுமான அனுமதிகளும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்தல்.
இது போன்ற பிரச்சினைகள் பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடியவையாக இருப்பதால், அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் இணைந்து விரைவில் ஒரு தீர்வை வகுக்கும் முயற்சியில் ஈடுப்படுமென பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
\"உள்ளூர் சமூகத்தின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,\" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலாங்கூர்
கோல சிலாங்கூர், வாகீசர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மும்மொழிப் போட்டிகளில் வாகை சூடினர்- தீபன் சுப்ரமணியம் வாழ்த்து
பினாங்கு
அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் பயண விபரங்கள்
மலாக்கா
Pemandu bas ekpres, kekasih atas riba direman bantu siasatan polis
திருக்கோவில்
ஜூக்ரா கருமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி மகேஸ்வரத் திருவிழா
சிலாங்கூர்
நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பங்கு பெறுவதன் மூலம் மத நல்லிணக்கத்தை வளர்த்து கொள்ள முடியும்!- பாப்பா ராய்டு ஆலோசனை
சிலாங்கூர்
கோலலங்காட்டில் 383 பேருக்கு டெங்கி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்- மாவட்ட சுகாதார இலாகா அறிவிப்பு.
கோலாலம்பூர்
செந்தூல் கொன்வென்ட் ஆரம்பப்பள்ளி திறந்த வெளி மண்டபத்திற்கான ரிம. 2 இலட்சம் மானியம் பிரபாகரன் வழங்கினார்