Alaioli
பல்லினம் வாழும் மலேசியாவில் நாம் மதங்களைக் கடந்து மலேசியர்களாய் மேன்மை கொள்ள வேண்டும் எனவும் பல்லினத்தின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் மதம்,இனம்,மொழி கடந்து மலேசியர்கள் என்னும் மேன்மையில் உயர்ந்திருப்பதாகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
அதுபோல்,நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து மக்களுக்கானப் பணியில் மதம்,மொழி,கடந்து ஆக்கப்பூர்வமாக தம் பங்களிப்பை ஆற்றி வருவதாக கம்போங் கூர்னியா சூராவிற்கு வருகை புரிந்த பின்னர் சிவகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சூராய் நிர்வாகம் முன் வைத்த கோரிக்கையை ஏற்று அங்கு வருகை புரிந்த சிவகுமார் அதன் தேவைகளைக் கேட்டறிந்தார்.அவ்வகையில்,இதற்கு முன்னர் பல தேவைகளை நிறைவு செய்திருக்கும் அவர் இம்முறை சூராய் நிர்வாகம் முன் வைத்த தரை விரிப்பு கோரிக்கையை ஏற்று கொண்டு கவனத்தில் கொள்வதாகவும் கூறினார்.
தொழுகைக்கு தரை விரிப்பு மிக முக்கியமான அம்சமாக அமைந்திருப்பதாகவும் விவரித்த சிவகுமார் இவ்விவகாரத்தை விரைந்து நல்லதொரு தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சிவகுமாரின் இவ்வருகையின் போது அவரோடு கிராமத்து மேம்பாட்டு நிர்வாகம்,வட்டார கவுன்சிலர்கள் உட்பட அவரது சிறப்பு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய சிவகுமாருக்கு சூராய் நிர்வாகம் நன்றியும் தெரிவித்தனர்.
பினாங்கு
மகளிர் தினத்தையொட்டி பினாங்கில் மலர்கள் விநியோகித்து ஜ.செ.கவினர் மகிழ்ச்சி கொண்டாட்டம்!
பந்திங்
பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் நோன்புப் பெருநாள் ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை 650 பேர் பெற்றனர்.
கோலசிலாங்கூர்
கோல சிலாங்கூர் அங்காளபரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் 10 ஆயிரம் பேர் திரண்டனர்.
ஈப்போ
ஆலய விவகாரங்களில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை நிறுத்திகொள்ளவேண்டும் !அர்விந்த் அப்பளசாமி வலியுறுத்து!!
பினாங்கு
Perpaduan dan Keharmonian Teras Kekuatan: KRT Pantai Jerjak Raikan Tahun Baru Cina dengan Penuh Muhibah
பினாங்கு
RSN Rayer Gesa Polis Siasat Zamri Vinoth Berhubung Kes Langgar Lari di Bukit Mertajam
பினாங்கு
பள்ளி வயதிலேயே மாணவர்களுக்கு வர்த்தக அறிவை வளர்க்க வேண்டும் எண்ட்ரிகோ இயக்குநர் ராஜேந்திரன்
பினாங்கு
53 Pelajar Terima Bantuan Pendidikan LWHPP Fasa Pertama 2026