Alaioli
102 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி, புனிதச் சிலுவை தன்னாட்சிக் கல்லூரியுடன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் புரிந்துணவு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 6.8.2025ஆம் தேதி நடைபெற்ற \"இந்தியச் சிந்தனையில் செவ்வியல் இலக்கியங்கள்\" தலைப்பில் நடந்த கருத்தரங்கின் சிறப்பு அங்கமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடும் நிகழ்வு நடந்தது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நிகராளியாக அதன் முன்னாள் தலைவர் பெ.இராஜேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் அருள்ஜோதி இராஜகுமாரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இரு வழி கல்வி இலக்கிய பரிமாற்ற திட்டங்களுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். குறிப்பாக மலேசிய இலக்கியம் குறித்தும் இலக்கியவாதிகள் பற்றியும் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கும் மலேசியப் படைப்புகளை பாடநூல் ஆக்குவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை புரியும்.

ஏற்கனவே சில கல்லூரிகளில் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அங்கு மலேசிய இலக்கியம் பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
\"இந்திய சிந்தனை மரபில் செவ்வியல் இலக்கியங்கள்\" எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் 52 கட்டுரைகள் படைக்கப்பட்டன. அந்த கட்டுரைகள் நூலாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் இராஜகுமாரி நூலை வெளியிட மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெ. இராஜேந்திரன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்.
இந்தக் கருத்தரங்கிற்காக மலேசியாவை சார்ந்த மன்னர் மன்னன் மருதை, ஈஸ்வரி குணசேகரன் ஆகியோர் படைத்தளித்த கட்டுரைகளும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
மலேசியா
மூன்று ஆண்டுகளில் நிலைத்தன்மையும் நேர்மையும் — ஒற்றுமை அரசு மலேசியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தியது
மலேசியா
ஜொகூர் முழுவதும் ‘BANTUAN KASIH JOHOR’ வழங்கல் தீவிரம் — மாசாபில் மகிழ்ச்சியுடன் உதவிகளை வழங்கிய மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காஸி
ஜொகூர்
‘காற்று வெளியிடை கண்ணம்மா’ கவிதைத்தொகுப்பு ஜொகூரில் அறிமுக விழா
ஜொகூர்
இந்திய இளம் பட்டதாரிகள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் — மாநாட்டில் ஒலித்த முக்கியக் கருத்துகள்
இந்தியா
India Falls to Germany 5-1 in Men’s FIH Hockey Junior World Cup 2025 Semi-Finals at Madurai
கால்பந்து
Malaysia Fights to the End but Indonesia Denies Women's Team Final Berth in Gripping Semi-Final
ஈப்போ
உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? சிவநேசன் சிவநேசன் காட்டம்
ஜொகூர்
ஜொகூர் மாநிலத்தில் டெங்கு நோய் குறைவடைந்த நிலையிலும், இந்த வாரத்தில் புதிய வழக்குகள் அதிகரிப்பு - லிங் தியான் சூன் எச்சரிக்கை.