Alaioli
உருவாக்கம் கண்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்களால் நீலாய் சிரம்பான் நெடுஞ்சாலையில் பயங்கர வெள்ளம்

எஸ்.எஸ்.மணிமாறன்.

சிரம்பான் மார்ச் 10  இங்கு,  உருவாக்கம் கண்டு வரும் சில புதிய மேம்பாட்டுத் திட்டங்களால், சில தினங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீலாய்..சிரம்பான் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பயங்கர வெள்ளம் பல வாகனமோட்டிகள் முன்னொக்கிச் செல்ல முடியாமல் தவித்த வேளையில் இவ்வட்டாரத்தில் சாலை  நிலை குத்திப் போனதாக நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் அலை ஒளி செய்தியாளரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.


மாநில அரசின் கீழ் செயல்படும் வடிகால் நீர் பாசன இலாகா அதிகாரிகளை அழைத்து இன்று மதியம் நேரில் சென்று தாம் சம்பவ இடங்களைப் பார்வையிட்டதோடு, இதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தாம் உத்தரவிட்டதாக அவர் கூறினார். நெருங்கி வரும் ஹரிராயா நோன்புப் பெருநாள் விழா காலங்களில் பாலேக் கம்போங் செல்வோர் வடக்கு தெற்கு நோக்கிச் செல்லும் நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் கடும் மழை பொழியும் சாத்தியக் கூறுகள் ஏற்படுமானால் பலரும் அதிக சிரமத்தை அனுபவிக்கக் கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகள் விரைந்து இதற்கான தீர்வை உடனடியாகக் காணும்படி தாம் ஆலோசனை விடுத்ததாக அருள் குமார் அலை ஒளியிடம் கூறினார்.

Leave a Comment
Trending News