Alaioli
செந்தூல் கொன்வென்ட் ஆரம்பப்பள்ளி திறந்த வெளி மண்டபத்திற்கான ரிம. 2 இலட்சம் மானியம் பிரபாகரன் வழங்கினார்

எஸ்.எஸ்.மணிமாறன்

கோலாலம்பூர், ஏப்ரல் 16-  இங்கு, செந்தூல் வட்டாரத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் கொன்வென்ட் ஆரம்பப்பள்ளி வளாகத்தில் அமையவிருக்கும் திறந்த வெளி மண்டபத்திற்கான செலவினங்களை ஈடுகட்ட 2 இலட்சம் ரிங்கிட் அரசின் மானியத்தை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் காசோலை வடிவில் ஒப்படைத்தார்.


பள்ளி மாணவர்களுக்கான புறப்பாட நடவடிக்கைகள், பள்ளித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அமைவிருக்கும் திறந்த வெளி மண்டபம் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் பயனாக அமைந்திருக்கும் என்று பிரபாகரன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.



பள்ளி நிர்வாகத்தினருடன் சற்று நேரம் கலந்துரையாடிய பிரபாகரன் வெளி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களைச் சந்தித்து அளவளாவினார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment