Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோல சிலாங்கூர், ஏப்ரல் 16- கோல சிலாங்கூர் மாவட்டத்தில் பழைமையான பள்ளிகளில் ஒன்றான, வாகீசர் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற மும்மொழிப் போட்டிகளில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் சிறந்த படைப்புகள் மற்றும் திறனை வெளி கொணர்ந்து வெற்றி வாகைச் சூடினர் என்று சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுப் பத்திரமும் எடுத்து வழங்கிய புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
வாகீசர் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆசிரியராக விளங்கி வரும் தலைமையாசிரியர் திருச்செல்வகுமாரின் கட்டுக் கோப்பான செயல்பாடுகளால் மாணவர்கள் தமிழ் மலாய் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமையும் திறனும் பெற்ற மாணவர்களாக தற்போது உருவாகியுள்ளனர் என்று அவரது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி வெற்றி பெற பேராதரவு வழங்கிய சக ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தீபன் சுப்ரமணியம் தமது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.-Alaiolinews

மலாக்கா
Pemandu bas pandu sebelah tangan ditahan polis
கோலாலம்பூர்
Lelaki intai wanita dalam tandas LRT didenda mahkamah
Pembunuhan
71 year old man involved in Kota Tinggi fatal shooting remanded for 7 days
பினாங்கு
LWHNPP Santuni Pesakit Dialisis, Raikan Rekod MBOR dan Lancar Kiosk Digital
பினாங்கு
14-Year-Old Penang Student Sets Malaysia Book of Records for Pi Recitation
பினாங்கு
உலக அமைதிக்கும் இந்தியர் பொருளாதார மேம்பாட்டிற்கும் பிரதமர் அன்வர் தலைமை ஏற்க வேண்டும் - டத்தோ பி.குணசேகரன் அறைகூவல்!
பினாங்கு
Pencapaian Cemerlang Pelajar Pulau Pinang terpahat dalam Malaysia Book of Records
இந்தியா
Modi’s Bold Claim: Massive BJP Victory Imminent in West Bengal Elections”