Alaioli
ஆலயங்கள் நமது சமய நம்பிக்கை,பண்பாடு மற்றும் அதன் செயல்பாடுகளை மேலோங்க செய்திடும் அதேவேளையில் நம் சமுதாய மேம்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்காற்ற வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் சமூகச் சிந்தனைவாதியுமான மாண்புமிகு வ.சிவகுமார் கேட்டு கொண்டார்.
ஆலயங்கள் சமயக்காரியங்களோடு மட்டும் நின்றுவிடாமல் நம்மினத்தின் கல்வி,சமூக பொருளாதாரம்,ஒருமைப்பாடு என பல்வேறு நிலைகளில் அதன் பங்களிப்பினைச் செய்திடல் வேண்டும் என்றார்.
ஜெலாப்பாங்,தாமான் மேரு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்திற்கு வருகை அளித்த பின்னர் சிவகுமார் இதனை வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி,ஆலயங்கள் சமூக மேம்பாட்டு மையங்களாக உருவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர் ஆலயங்கள் நம் சமுதாயத்திற்கான தகவல் மையங்களாகவும் திகழ வேண்டும் என மேலும் கேட்டு கொண்டார்.
ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில் ஆலய நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று அவ்வாலயம் சென்று கடவுளை வணங்கிய சிவகுமார் ஆலயத்தின் செயல்பாடு,அதன் உட்கட்டமை,மேம்பாடு என பல விடயங்களைப் புதிய ஆலய நிர்வாகத்துடன் கலந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு
Malia Bakery Hulur Sumbangan Bantuan Hari Raya Kepada 200 Keluarga di Pulau Pinang
ஜொகூர்
908 Penduduk DUN Tenggaroh Terima Bantuan Kasih Johor, Syukur Peroleh Inisiatif Kerajaan Negeri
ஜொகூர்
400 பேருக்கு உதவி வழங்கிய ஜொகூர் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர் சங்கம்
கூலாய்
திருவாசகம் பாராயணம் மற்றும் 63 நாயன்மார்கள் மாறுவேடப் போட்டி – கூலாயில் சிறப்பாக நடைபெற்றது
புக்கிட் மெர்தாஜம்
டிஜிட்டல் உலகில் தடம் பதிக்கும் கப்பளா பத்தாஸ் தமிழ்ப்பள்ளி - நவீன 'ஊடகப் படைப்பு மையம்' திறப்பு!
பந்திங்
தாமான் ஜெயா உத்தாமா நோன்பு துறப்பு உபசரிப்பில் எலிசா சாம்சன் இமானுவேல் பங்கேற்பு.
தெலுக் இந்தான்
கீழ் பேராக் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற “ஸ்கை மனவளக்கலை” யோகா பயிலரங்கம்..!
தெலுக் இந்தான்
கீழ் பேராக் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற “ஸ்கை மனவளக்கலை” யோகா பயிலரங்கம்..!