Alaioli
சிங்கப்பூர் சின்னையா

ஓடி ஓடி உழைக்கின்ற

உத்தமர் சீலர் - வாழ்வின் 

விண்ணைத் தொடும்

வானவில் வண்ணம் ..!

உலகம் தாழ்ந்து வணங்கிடும்

உயர்ந்த மனம் கொண்ட வீரர்...


செங்கதிரோன் விழிபாட்டில்

சேவையால் போற்றும் வீரன்,

சிங்கைத் தரணியில் எழுந்தவன் —

சிறந்த நம் சின்னையா வீரன்!


சிகரமென உயர்ந்த நெஞ்சம்,

சிந்தையில் மனித நேயம்,

சிரமமென வந்த போதிலும்,

சிலிர்க்கச் செய்யும் அவன் வேகம் !


அறிவும் அன்பும் அணிந்தவன்,

அமைதியில் ஜோதி ஒளியவன்

உழைப்பே அவனுக்கு உயிராகும்

உயிருக்கு உயிராய் நிற்பவன்

தமிழ்ப் பற்றாளன்

தரணி போற்றும் நாயகன்

கொடை நெஞ்சகம் கொண்டவன் - எங்கள்

முனைவர் சின்னையா தோழனே !


           செ.குணாளன்

Leave a Comment
Trending News