Alaioli
மனிதவள மேலாண்மை இளங்கலை பட்டம் பெற்றார் இரா. தமிழ் செல்வி

புத்ராஜெயா, மே 4-தெலுக் இந்தான் பகுதியைச் சேர்ந்த திரு. மு. இராமமூர்த்தி மற்றும் திருமதி கி. பா. ரூபாவாதி தம்பதியினரின் மூன்றாவது மகளான இரா. தமிழ் செல்வி, மலேசிய திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University Malaysia) வணிகத்துறையில் மனிதவள மேலாண்மை இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.


இந்நாள் விடியற்காலையில் புத்ரா உலக வாணிப மையத்தில் (Putra World Trade Centre) இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், அவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டது.


பள்ளி சிறுவயதிலேயே வியாபாரத் துறையில் உயர்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கனவைப் பேணிய தமிழ் செல்வியின் அந்தக் கனவும், பெற்றோர்களின் பேராசையும் இன்று நனவாகியுள்ளது.


தொழில்முனைவோர் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் அவரது பயணம், இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post ImagePost Image

Leave a Comment
Trending News