Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம் ஏப்ரல் 30. சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில், மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் நல்லாசியுடன் பந்திங் நகரை யொட்டி எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழைமையான தாமான் செரி புத்ரா அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கலாசார மண்டபத்தில் நாளை 1.5.2026 அரசு விடுமுறை நாளான , மே தினத்தன்று மாலை 7 மணி தொடக்கம் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் சைவ உணவு உபசரிப்புடன், கண்ணுக்கு விருந்தாக ஆடல் பாடல் பரிசளிப்பு என பண்பாடு பாரம்பரியப் படைப்புகளுடன் பல் வேறு அங்கங்கள் இவ்விழாவில் இடம் பெறும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
ஆலயத் தலைவர் கே.குமார் நிர்வாகத்தினரின் கூட்டுப் பணி நடவடிக்கையில் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடந்தேறும் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். அழைக்கப் பிரமுகர்கள் பொது மக்கள் மத்தியில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா நேர்த்தியாக வழி நடத்திச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேராக்
பேராவில் 47 கோயில்களை பாதுகாப்பதில் உள்ள சவால்கள் ; டத்தோ சிவநேசன் தொட்டுக் காட்டுகிறார்..!
கால்பந்து
Piala Baradhan 2026: Perlis sedia gegarkan gawang Melaka, optimis juara edisi ke-86
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் பந்திங்கில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
கோலாலம்பூர்
‘தர்மா மடானி’ திட்டம் மடை மாற்றியது அநீதி ; செனட்டர் சரஸ்வதி கந்தசாமி குற்றச்சாட்டு..!
சிலாங்கூர்
கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சிறந்த சேவையாளர் களுக்கு பாராட்டுப் பத்திரம்
சிலாங்கூர்
Syarikat tempatan buat pengisytiharan palsu, 10 kontena e-waste berjaya dikesan AKPS Klang
நீதிமன்றம்
Kapten tentera didakwa membunuh, pandu mabuk di mahkamah
சிலாங்கூர்
Polis buru suspek bakar dua kenderaan di perumahan di Klang