Alaioli
பங்கோக், ஜூன் 2 -
இரண்டாம் உலகப் போர், 1941 முதல் 1945 வரை நீடித்த அந்தக் கொடூர காலகட்டம், உலகின் பல பகுதிகளில் மனித ரசங்களை மீறிய பல்வேறு சம்பவங்களை உருவாக்கியது என்று பினாங்கு அலை ஒளி சமூகநல இயக்கத்தின் தலைவர் ப.த.மகாலிங்கம் விவரித்தார்.
அதில் ஒன்று, ஜப்பானியரால் கட்டப்பட்ட சயாம்-பர்மா ரயில் பாதை — அல்லது உலகறிந்த பெயராக \"மரண ரயில்\" என அழைக்கப்படும் அந்த நெடுஞ்சாலை என்றால் நெஞ்சம் இன்றும் பதறுகிறது.
இப்பாதை, ஜப்பானியரின் தென்கிழக்கு ஆசியப் படைகள் தங்கள் போர்த்திட்டங்களை எளிதாக்கும் நோக்கில், தாய்லாந்தின் பங்கோக் நகரத்தைப் பர்மாவின் (நிகழ்கால மியான்மார்) ரங்கூன் நகருடன் இணைக்க உருவாக்கப்பட்டது. இப்பணிக்காக, பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் போர் கைதிகள் கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதி தென்னிந்தியத் தமிழர்களாவர். குறிப்பாக மலேசியத் தமிழர்கள் என்றால் அது மிகையாகாது.
அன்றைய மலாயா பகுதியிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யவந்த தமிழர்கள், ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் சிக்கிக்கொண்டு, அவர்களின் கட்டாயத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். சயாம்-பர்மா பாதையில் கட்டுமான பணிக்குத் தள்ளப்பட்ட அவர்கள், அந்நிய நாட்டின் காடுகள், மலைப் பகுதிகளில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வேலை செய்யவைக்கப்பட்டனர்.
பிணிவுற்ற வாழ்க்கை, மரணத்தின் வாசல்
இவர்கள் பெற்ற உணவு மிகவும் குறைவானதோடு, சுகாதாரமற்றதும், மோசமாகச் சூழ்நிலையும். கலாச்சாரம், மலேரியா போன்ற விலங்குகளின் ஊடாக பரவும் நோய்கள், சூழ்நிலைகளால் அதிகரித்தன. மருத்துவ வசதி கிடையாத நிலையில், பலர் துயரமாக உயிரிழந்தனர். அரசு மதிப்பீடுகளின்படி, சுமார் ஒன்பது இலட்சம் பேர்கள் இப்பணியின் போது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தோர் பெரும்பாலானோர் அடையாளமின்றி சயாமிய மற்றும் பர்மா காடுகளில் புதைக்கப்பட்டனர். அவர்களின் துயர வாழ்க்கையும் மரணமும் உலகின் பெரும்பகுதியால் மறக்கப்பட்டதாகவே உள்ளது.
நினைவில் நிலைக்கும் நினைவுச்சின்னம்
இந்தக் கொடூரமான வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு, தற்போது சயாம மரண ரயிலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் வகையில், ஒரு நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. இச்சின்னம், சோதனைகள் நிறைந்த காலத்தில் உயிர் நீத்த நம் தந்தை, தாய், சகோதரர்கள் போன்றோருக்கு ஒரு மரியாதையான அஞ்சலியும், எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாகவும் விளங்குகிறது.
\"நினைவூம் செய்வோரை என்றென்றும் வணங்குவோம்\" என்பது அந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம். இது, தங்கள் உயிரை ஈந்தவர்களை நாம் மறந்துவிடக்கூடாதென்பதையும், அவர்களது தியாகம் எப்போதும் மனங்களில் நிலைத்திருக்க வேண்டும் என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது.
இது வெறும் ஒரு நினைவுச் சின்னம் அல்ல, இது ஒரு வரலாற்றின் சாட்சியும், வலியின் அழுத்தமான வெளிப்பாடும் ஆகும்.








Pulau Jerjak
Special prayers held at Deva Sri Siva Subramaniar Mathuraveeran Temple on Pulau Jerejak.
ஜொகூர்
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நிறைவு
ஜொகூர்
ஜொகூர், பொந்தியானில் வெள்ளத்திற்கான அறிகுறி- தீயணைப்புத்துறை விரிவான கண்காணிப்பு.
தெலுக் இந்தான்
தெலுக் இந்தான் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தெலுக் இந்தான்
அருள்மிகு ஶ்ரீ மகா நாகமுத்து மாரியம்பிகை ஆலயத்திற்கு ரிம 82,640.00 மானியம் வழங்கினார் ஙா கோர் மிங்
கோலாலம்பூர்
மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பிரிவின் பட்டமளிப்பு பாராட்டு விழாவில் டான்ஶ்ரீ குமரன் பேச்சு
கூலிம்
தடைகளைத் தாண்டிய தன்னம்பிக்கை: ஆசிரியர் மதன் பாஸ்கரனின் கல்விச் சாதனை
ஜொகூர்
Jemputan Ke Majlis Penyerahan Bantuan Kasih Johor 2.0 Untuk Warga DUN Tenggaroh