Alaioli
விமானம் எழுந்தது வானத்தின் மேல்,
விழுந்தது வாழ்க்கையின் நடுவே...
நான்கு நிமிடங்கள் –
நாட்கள் போல கனவுகளை சுமந்த நேரம்,
ஆனால் அந்த நிமிடமே
நிமித்தமாகி விட்டது.
நம் நெஞ்சை நிழலாக்கும் இருண்ட வரலாறு இது...!

உறவுகள் பறந்தன...
அன்புகள் எரிந்தன...
தந்தையின் குரல்,
தாயின் அன்பு,
மனையின் சிரிப்பு,
சகோதரனின் தோள்சாய்வு,
அனைத்தும் சாம்பலாய் நிலைகொள்ள...
அந்த ஒரே ஒரு கணம்
கண்களில் ஒளியைக் கிழித்து
நிழல்களாய் நம்மைச் சூழ்ந்தது.
மருத்துவ மாணவர்கள் கனவுகள் கனிந்து
விடுதியின் இடித்த கதவுகள் வழியே
வாழ்க்கை கதறியது...

மனித பிழை என்றொரு வார்த்தை,
அது எப்படி ஆறுதலாகும்?
எத்தனை பேரின் இதயத்தை
ஒரே வரியில் புதைத்து விட முடியும்?
பெருமூச்சில் பதுங்கிய பாசங்கள்
தீயில் கரைந்து நெஞ்சாகி விட்டன.
இப்போது அந்த நெஞ்சங்கள்
நம் இதயங்களில் துடிக்கின்றன.
ஒவ்வொரு சுவாசமும்
ஒரு பேரழிவின் நினைவாய் நுழைகிறது...
இந்நேரத்தில்,
வாடும் குடும்பங்கள் ஓரமாயிருக்க,
ஒரு நாட்டின் மனம்
அதுவும் உங்களோடு தவிக்கிறது.
மாண்ட மானிடத்தை யார் தருவர்?
நாம் தருவது,
அவர்களின் நினைவுகளை உயிராக்கும்
கவிதை மட்டுமே...
வெண்ணீராய் கலைந்த என் இதயம்,
அந்த குடும்பங்களுக்கு
ஒரு நிமிடம் அமைதி தந்திடட்டும்...
கனவுகளுக்கு கண்ணீராய் புகழஞ்சலி செலுத்தட்டும்...!!
திருக்கோவில்
பத்தாங் பெர்சுந்தை மேரி தோட்டத்தில் சித்திராப் பௌர்ணமி திருவிழா..!
பேராக்
பேராவில் 47 கோயில்களை பாதுகாப்பதில் உள்ள சவால்கள் ; டத்தோ சிவநேசன் தொட்டுக் காட்டுகிறார்..!
கால்பந்து
Piala Baradhan 2026: Perlis sedia gegarkan gawang Melaka, optimis juara edisi ke-86
ஷா ஆலம்
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் பந்திங்கில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.
கோலாலம்பூர்
‘தர்மா மடானி’ திட்டம் மடை மாற்றியது அநீதி ; செனட்டர் சரஸ்வதி கந்தசாமி குற்றச்சாட்டு..!
சிலாங்கூர்
கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சிறந்த சேவையாளர் களுக்கு பாராட்டுப் பத்திரம்
சிலாங்கூர்
Syarikat tempatan buat pengisytiharan palsu, 10 kontena e-waste berjaya dikesan AKPS Klang
நீதிமன்றம்
Kapten tentera didakwa membunuh, pandu mabuk di mahkamah