Alaioli
விமானம் எழுந்தது வானத்தின் மேல்,
விழுந்தது வாழ்க்கையின் நடுவே...
நான்கு நிமிடங்கள் –
நாட்கள் போல கனவுகளை சுமந்த நேரம்,
ஆனால் அந்த நிமிடமே
நிமித்தமாகி விட்டது.
நம் நெஞ்சை நிழலாக்கும் இருண்ட வரலாறு இது...!

உறவுகள் பறந்தன...
அன்புகள் எரிந்தன...
தந்தையின் குரல்,
தாயின் அன்பு,
மனையின் சிரிப்பு,
சகோதரனின் தோள்சாய்வு,
அனைத்தும் சாம்பலாய் நிலைகொள்ள...
அந்த ஒரே ஒரு கணம்
கண்களில் ஒளியைக் கிழித்து
நிழல்களாய் நம்மைச் சூழ்ந்தது.
மருத்துவ மாணவர்கள் கனவுகள் கனிந்து
விடுதியின் இடித்த கதவுகள் வழியே
வாழ்க்கை கதறியது...

மனித பிழை என்றொரு வார்த்தை,
அது எப்படி ஆறுதலாகும்?
எத்தனை பேரின் இதயத்தை
ஒரே வரியில் புதைத்து விட முடியும்?
பெருமூச்சில் பதுங்கிய பாசங்கள்
தீயில் கரைந்து நெஞ்சாகி விட்டன.
இப்போது அந்த நெஞ்சங்கள்
நம் இதயங்களில் துடிக்கின்றன.
ஒவ்வொரு சுவாசமும்
ஒரு பேரழிவின் நினைவாய் நுழைகிறது...
இந்நேரத்தில்,
வாடும் குடும்பங்கள் ஓரமாயிருக்க,
ஒரு நாட்டின் மனம்
அதுவும் உங்களோடு தவிக்கிறது.
மாண்ட மானிடத்தை யார் தருவர்?
நாம் தருவது,
அவர்களின் நினைவுகளை உயிராக்கும்
கவிதை மட்டுமே...
வெண்ணீராய் கலைந்த என் இதயம்,
அந்த குடும்பங்களுக்கு
ஒரு நிமிடம் அமைதி தந்திடட்டும்...
கனவுகளுக்கு கண்ணீராய் புகழஞ்சலி செலுத்தட்டும்...!!
கோலாலம்பூர்
Himpunan GARAH: Anwar, kerajaan dan lima lain diarah fail pembelaan sebelum 21 Mei depan
சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில அளவில் வாழும் சீக்கிய பெருமக்களுக்கு வைசாக்கி புத்தாண்டு வாழ்த்துகள்
புத்ராஜெயா
Sindiket pemalsuan dokumen pekerja asing lumpuh, dalang utama warga Nepal turut dicekup Imigresen
அமெரிக்கா
Perang Iran hampir tamat, kata Presiden AS Donald Trump
நெகிரி செம்பிலான்
Sekolah tidak boleh tahan sijil, dokumen rasmi pelajar – JPNS
மலாக்கா
Lans Koperal cedera diserang lelaki bersenjata parang semasa serbuan dadah
கெடா
உலக அரங்கில் மலேசியாவிற்குப் பெருமைச் சேர்த்த சுங்கை பட்டாணி மாணவி: இரட்டை பதக்கம் வென்று வாகை சூடினார் மகாம்பிகை உமாசங்கர்
பினாங்கு
சிகரம் தொடுவோம் பிறையில் பொங்கியெழுந்த கல்விப் புரட்சி - 2000 மாணவர்கள் பங்கேற்ற 'கல்வி யுத்தம்' மகத்தான வெற்றி!