Alaioli
வரும் 11.4.2026.சனியன்று  பந்திங் எம்சிஎஸ் கல்லூரியில் மாநில அரசின் ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கார்னிவல் = பாப்பா ராய்டு அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்

ஏப்ரல் 6.   வரும் 11.4.2026 சனிக்கிழமை அன்று 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை, இங்கு பந்திங் எம்சிஎஸ் கல்லூரியில் உள்ள பிரதான மண்டபத்தில் சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் ஜோப் கேர் வேலை வாய்ப்பு கார்னிவல் நிகழ்ச்சி நடை பெற விருப்பதாக மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இதுகாறும் வேலை தேடி வரும் இளைஞர்கள் தங்களது கல்வித் தகுதிச் சான்றிதழ், மற்றும் வேலையைப் பெறுவதற்கான சுய விவரங்களையும் உடன் கொண்டு வரும்படி அவர் கேட்டுக் கொண்டார். மாநில அரசின் ஜோப் கேர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்க வரும்படி பாப்பா ராய்டு இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Comment
Trending News