Alaioli
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு “பந்துவான் காசிஹ் ஜொகூர்” – சரஸ்வதி விளக்கம்

கே.கே.ஆர்.தேவி

ஜொகூர், ஏப்.19 – கெமெலா சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, பெகோக் சட்டமன்ற உறுப்பினர் டான் உடன் இணைந்து செகாமட் பகுதியில் செயல்பட்டு வரும் முஹிபா டயாலிசிஸ் மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு “பந்துவான் காசிஹ் ஜொகூர்” உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.



இந்த முறை உதவி பெற்றவர்களில், முன்னதாக பட்டியலில் இடம்பெறாதவர்களும் முறையீடு செய்த பின்னர் அனுமதி பெற்று இணைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். உதவி தேவைப்படுவோரின் நிலையை ஆராய்ந்து, அவர்களை ஆதரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவது ஜொகூர் மாநில அரசின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.


உதவி பெறாமல் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து சேர்க்கும் முயற்சியில் பெகோக் சட்டமன்ற உறுப்பினர் டான் அளித்த ஒத்துழைப்பு முக்கியமானதாக அமைந்ததாகச் சரஸ்வதி தெரிவித்தார். எந்த நபரும் உதவி இன்றி விடப்படாமல் தேவையான ஆதரவைப் பெறும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பது மாநில அரசின் நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.



நீண்டகால சிகிச்சை காரணமாகப் பொருளாதார சிரமத்தை எதிர்கொள்ளும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு இந்த உதவி ஒரு ஆதரவாக அமையும் என்றும், குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.- Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News