Alaioli
வரும் 2030 க்குள் ' வாசிக்கும் நாடாக' மலேசியா உருவாகும்.

எஸ்.எஸ்.மணிமாறன். 

கோலாலம்பூர் ஏப்ரல் 19. வரும் 2030 க்குள் மலேசியா ' வாசிக்கும் நாடாக' உருமாற்றம் பெறும் என்று தேசிய ஒருமைப்பாட்டு த்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 


தற்போது அதன் முன்னெடுப்பில் 6 மில்லியனுக்கும் அதிகமான நூல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு தேசிய நூலகத்தில் முறையாக வைக்கப்படும் என்று அதன் தொடர்பு அதிகாரி டஹ்லான் ரஷிட் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


இந்த நிலையில், வாசிப்பில் மும்முரம் செலுத்தும் கல்வி மான்களும், பள்ளி மாணவர்களும், குறிப்புகள் சேகரிக்கும் பத்திரிகைத் தொடர்பாளர்களும் தேசிய நூலகத்தில் அடிக்கடி வந்து ஆர்வத்துடன் பங்கேற்று செல்வதை தாம் கண்கூடாக பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தததாக டஹ்லான் கருத்து தெரிவித்தார்.

Leave a Comment
Trending News