Alaioli
வாத நோயால் அவதியுறும் நோர்வானி துணைவர் நலம் பெற புஷ்பா ராஜனின் மனித நேய உதவிகள்

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர், ஏப்ரல் 29 - வாத நோயின் காரணமாக அவதியுற்று வரும் அவான் நேசனல் செயலவை உறுப்பினர் புவான் நோர்வானி அமாட்டின் கணவர் பூரண நலம் பெற வேண்டி, கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் கணிசமான உதவி நிதியை மனித நேய அடிப்படையில் வழங்கினார்.



இங்கு சசரான் சுங்கை பூலோ கிராமப் பகுதியில் வசித்து வரும் புவான் நோர்வானியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த புஷ்பா ராஜன் கணிசமான உதவி நிதியை  அவரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.


வாத நோயின் காரணமாக சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருந்து வரும் நோர்வானியின் கணவர் நலம் பெற தாம் பிரார்த்தனை செய்வதாக புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தகவல் தெரிவித்தார்.-Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News