Alaioli
டிகே மூர்த்தி
கோலசிலாங்கூர், டிச 5 - கோலசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ளிட்ட தமிழ்ப்பள்ளிகளில் ஓப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும். கடந்த 1927 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நூறு ஆண்டுகள் நிறைவு விழாவை எதிர்நோக்கியுள்ள இப்பள்ளியில் 27 மாணவர்களும் 7ஆசிரியர்களும் இருக்கின்றனர்.
யூ.பி.எஸ்.ஆர் தேர்வு காலங்களில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் முழுத் தேர்ச்சியை எட்டியுள்ளது. மாவட்ட அளவிலான செந்தமிழ் விழாவை நடத்த முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட பள்ளியாகும்.

நேற்று இப்பள்ளியில் நடைபெற்ற நேர்த்தி நிறை விழா மற்றும் ஆறாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்கு ஒற்றுமை துறையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சிறப்புரையாற்றினார்.
தற்போது முதலாம் ஆண்டில் 7 மாணவர்கள் உள்ளனர். அதுவே 17 மாணவர்கள் பயின்றால் ஒற்றுமை அரசின் சார்பில் அம்மாணவர்களின் போக்குவரத்து செலவுகள் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்படும் என்ற உறுதிமொழி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தின் அவசியத்தையும் சுட்டினார். வாசிப்பு பழக்கம் இல்லை என்றால், மாணவர்களின் அறிவு வளர்ச்சி தடைபடும். எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலைத் தருவது வாசிப்பு பழக்கமே என்றும் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
இப்பள்ளி வளாகம் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். இத்தருணத்தில் ஆசிரியர்களையும் பொதுப்பணியாளர்களின் கைவண்ணத்தைக் கண்டேன் என்று பள்ளிக்கு புகழாரம் சூட்டினார் துணையமைச்சர்.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan