Alaioli
சிவாலெனின்
பத்துகாஜா,மார்ச்05: 2026 சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து மெங்லெம்பு வணிகர் பொழுதுபோக்கு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியோருக்கான சமூகநல உதவித் திட்டத்தை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூகத்தின் மீதான நலன் மற்றும் அக்கறை உணர்வு தொடர்ந்து வலுப்படுத்தப்படுகிறது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வ.சிவகுமார் பெருமிதம் கொண்டார்.
இந்த அர்த்தமுள்ள வருடாந்திர திட்டம் உள்ளூர் சமூகத்தால் பெரிதும் பாராட்டப்படும் ஒரு பாரம்பரியமாக மாறியுள்ள நிலையில் தொடர்ந்து ஏழாவது முறையாக இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இது தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக சமூகத்தில் உள்ள முதியவர்களுக்கு உதவுவதில் அமைப்பின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபிப்பதாகவும் ஒரு தலைமுறையின் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையின் வெளிபாடாகவும் இருப்பதாக கூறினார்.
இத்திட்டத்தின் மூலம், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்தம் 300 மூத்த குடிமக்கள் உதவி பெற்றுள்ளனர். வழங்கப்படும் உதவியில் அடிப்படைத் தேவைகள் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் சீனப் புத்தாண்டை அன்போடு நினைவுக்கூறும் வகையில் அங் பாவும் வழங்கப்பட்ட்த. இந்த முயற்சி முதியவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் தருகிறது என்பதையும் சிவகுமார் சுட்டிக்காண்பித்தார்.
இத்தகைய உன்னத முயற்சிகள் பாராட்டுக்குரியவை, ஏனெனில் அவை மனிதநேயத்தின் மதிப்புகள், சமூக அக்கறை மற்றும் சமூகத்தில் ஒற்றுமையின் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. இது போன்ற நலத்திட்டங்கள், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதிலும், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த சமூகங்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதிலும் சமூக அமைப்புகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
இந்த நலத்திட்ட முயற்சியை ஆதரிக்கும் வகையில் மெங்லெம்பு சட்டமன்ற உறுப்பினர் வெ.3,000 நன்கொடை அளித்துள்ளார், அதே நேரத்தில் பத்து கஜா நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் வெ.5,000 மானியமாகவும் அவர் வழங்கினார்.மேலும், உள்ளூர் சமூகத்திற்கு நேரடியாக பயனளிக்கும் நலத்திட்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அடையாளமாக இந்த பங்களிப்ப திகழ்வதாகவும் கூறினார்.
இத்திட்டம் ஒரு உதவி நடவடிக்கை மட்டுமல்ல, சமூகத்தில் ஒற்றுமை மற்றும் அன்பின் உணர்வை வலுப்படுத்தும் ஒரு தளமாகும். இது போன்ற தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் முதியோர் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவளிக்கவும் பங்களிக்கவும் மேலும் பல பொது இயக்கங்கள் முன்வரும் என்று தாம் பெரிதும் நம்புவதாக தனது நம்பிக்கையை அவர் மேலும் வெளிப்படுத்தினார்.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan