Alaioli
தாசேக் குளுகோர், ஜூன் 12 –
பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய வகை மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கோ. தியாகராஜன் தலைமையில் 2025ஆம் ஆண்டு செந்தமிழ் விழா விமர்சையாகவும் மரியாதையோடும் சிறப்பாகவும் நடைபெற்று, மாணவர்களிடையே தமிழ்ப் பற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் தூண்டும் நிகழ்வாக அமைந்தது.

இந்த விழாவை பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் சிறப்புரையுடன் தொடக்கி வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர், \"செந்தமிழ் என்பது செம்மையான தமிழ், முழுமையான தமிழ் என்பதைக் குறிக்கிறது. தமிழோடு பயணித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இடைநிலைப் பள்ளிக்கு சென்ற பிறகும் தமிழைப் பாடமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து பயில வேண்டும் என மாணவர்களை ஊக்குவித்தார்.


இன்றைய சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் கைப்பேசிகள் உள்ளன என்பதை நினைவுபடுத்திய டத்தோஸ்ரீ, அவற்றில் வரும் செய்திகள் மற்றும் தகவல்களில் நல்லவை, அறிவை வளர்க்கும் செய்திகள், வெற்றியைத் தூண்டும் தகவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றார். நேரத்தை வீணாக்கும் வீடியோ, விளையாட்டுகள் மற்றும் தவறான செய்திகளில் அதிக நேரம் செலவிடாமல், சிந்தனையைத் தூண்டும் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி தனது 99 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, தலைமை ஆசிரியர் திரு. கோ. தியாகராஜன், நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னோட்ட பணிகளைத் திட்டமிட்டுள்ளார். பள்ளியின் வளர்ச்சிக்காக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். “தமிழின் வளர்ச்சி என்பது பள்ளி வளர்ச்சியோடு இணைந்திருக்கிறது” என்றும் கூறினார்.

விழாவில் மாணவர்கள் ஆடல், பாடல், பேச்சுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களின் திறமைகளை மேடையில் வெளிப்படுத்தினர். வெற்றியாளர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. \"கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பதுபோல், இங்கு கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் அறிவையும் திறமையையும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வளர வேண்டும் என டத்தோஸ்ரீ கூறினார்.
மேலும், பழைய நீர் எங்கு விழுகிறதோ அந்தத் தன்மையைப் பெறும்; ஆனால் நீங்கள் தெளிந்த நீரோடையாக வெளிப்பட்டு பிறருக்கு பயன்பட வேண்டும்” என்ற உவமையின் மூலம் மாணவர்களை ஒழுக்கத்துடனும் விழிப்புணர்வுடனும் வாழ அழைத்தார்.
நிகழ்வில் முன்னாள் தலைமை ஆசிரியர் வே. தமிழ்ச் செல்வி, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பிரகாஷ், திரு. ஜெமா நசீர், திரு. அருண், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
தலைமைப் பொறுப்பேற்று வெறும் ஆறு மாதங்களில் பள்ளியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் புதிய ஆளுமையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பள்ளியைச் சுறுசுறுப்பாக மாற்றிய தலைமை ஆசிரியர் திரு. கோ. தியாகராஜனுக்கு விழா மேடையில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

இவ்வாறு, மனப்பூர்வ தமிழ்ப் பாசமும் கல்வி வளர்ச்சியும் இணைந்த ஒரு விழாவாக 2025ஆம் ஆண்டு செந்தமிழ் விழா நினைவில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது.
பத்துகாஜா
மெங்லெம்புவில் 2026 சீனப் புத்தாண்டுடன் சமூக நலத்திட்டம் – சிவகுமார் பெருமிதம்!!
பந்திங்
வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கோலலங்காட் மாவட்டத்தின் திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்படும்; முகமட் ஹஸ்ரி தகவல். எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம்
பட்டம் பெற்ற 30 இந்திய பெண்கள் சமூக வளர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து.
ஷா ஆலம்
ஈரானில் நடந்து வரும் வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்மா புத்ரா மலேசியர்களுக்குப் புகலிடம் அளித்து வருகிறது; பாப்பா ராய்டு பாராட்டு.
கிள்ளான்
பண்டமாரான் ஜெயா மாரியம்மன் ஆலய மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஜொகூர்
சிகாமாட் காவல் உயர் அதிகாரி சுப்ரிதண்டன் அமாட் சம்ரி அவருடைய தலைமையில் கடந்த மாதம் சிறப்பு போலீஸ் ஒன்றுகூடல் நிகழ்வு
சித்தியவான்
ஆலயப் பாதுகாப்பு நிறைவாக உள்ள பேரா மற்றும் பினாங்கு : பேரா இந்துதர்ம மாமன்றம்..!
பினாங்கு
Pertubuhan Lima Generasi Pulau Pinang Santuni 100 Penerima Menerusi Majlis Berbuka Puasa Dan Bantuan Kebajikan