Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்.
கோலாலம்பூர். மார்ச் 4. அரசு தரப்பினர் இந்து வழிப்பாட்டு த் தலங்களை ஒரு காலத்தில் தகர்க்க முன் வருவார்களேயானால், இந்து பக்தர்கள் வேறு வழியின்றி தங்களது வீட்டையே ஆலயமாக்கி மணி அடித்து வழிபாடுகள் நடத்தி, இறைவனுக்கு பிரசாதம் படைத்து அவரே ஒரு அர்ச்சகராக மாறி இறைக் கடமைகளை நிறைவேற்றலாம் என்று வலைத் தளவாசியான ஜேவருஷா தமது கருத்தை மனம் திறந்து வெளியிட்டுள்ளார்.
அதே வேளையில், பூஜை புனஸ்காரங்கள் வழிபாடுகள் முறையாக செய்யத் தெரியாதவர்கள், பூஜைகளை நேர்த்தியாக செய்யத் தெரிந்த பக்தர்கள் இல்லங்களில் வழிபாடுகளில் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டு பிரசாதம் பெற்றுச் செல்லலாம் என்ற நிலை அன்றைய கால கட்டத்தில் நிகழும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
அதே வேளையில், இந்து பக்தர்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். இதன் மூலம், எந்தவிதப் பிரச்சினைகளும் இந்த நாட்டில் எதிர்காலத்தில் நடந்து விடாது என்பதால் தமது கருத்தை மனம் திறந்து முன்னெடுப்பதாக வலைத் தளவாசி ஜேவருஷா தெரிவித்துள்ளார்.
நாட்டின் ரூக்கூன் நெகாராவின் முதல் கோட்பாடான, ' இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் ' என்ற கோட்பாட்டை நாம் அதை வலுவாக மதித்து ஆதரிப்பதால், காலப்போக்கில் வழிப் பாட்டுத் தலங்கள் இல்லாது போகும் சாத்தியம் இருக்குமானால் அவரவரும் தத்தம் வீடுகளில் வழிபாடுகளை நடத்துவது ஒரு தவறான நடவடிக்கை என்று யாரும் கேள்வி ஏதும் எழுப்ப முடியாது என்பதை நாமும் உணர்ந்ததால் இதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பினாங்கு
பினாங்கு பிராங்கின் மால் ரமலான் உணவுச் சந்தையை மாநில சுகாதாரத் துறையினருடன் மாநகர் மன்ற மேயர் நேரில் ஆய்வு!
ஷா ஆலம்
மாநில அரசு செயலகத்தின் 90 பணியாளர்களுக்கு 200 ரிங்கிட் மதிப்புள்ள ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்; மந்திரி பெசார் அமிருடின் அன்பளிப்பு
பினாங்கு
பினாங்கு ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதியில் சீனப் புத்தாண்டு விருந்தோம்பல்!
கோலாலம்பூர்
வரும் ஜூன் 2026இல் நாடாளுமன்ற அவையில் 2 தவணைக்கான( 10 ஆண்டுகள்) நாட்டின் பிரதமராக வகிக்கும் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும்; டத்தோ ஃபாமி ஃபட்சில் அறிவிப்பு.
பினாங்கு
Thousands Gather in Penang to Celebrate Chap Goh Meh Festival
கோலாலம்பூர்
அரசு தரப்பினர் இந்து வழிப்பாட்டுத் தலங்களை ஒரு காலத்தில் தகர்க்க முன் வருவார்களேயானால் இந்து பக்தர்கள் வீட்டை ஆலயமாக்கி வழிபாடுகள் நடத்தலாம்; வலைத் தளவாசி ஜெவர்ஷா மனம் திறந்த கருத்து.
பினாங்கு
KEADILAN Pulau Pinang, NGO Buat Laporan Polis Terhadap Pihak Cetus Sentimen Perkauman
பினாங்கு
ADUN Bukit Tambun dipilih sebagai Exco ganti Fahmi Zainol