Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
களும்பாங் ஏப்ரல் 14 - சிலாங்கூர் மாநில அரசு செயலகத்தின் வாயிலாக 2026- 2027 ஆகிய ஈராண்டுகள் இந்தியர் சமூகத் தலைவர்களாக நியமனம் பெற்ற 55 பேரும் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் நலனை கருத்தில் கொண்டு எதிர் நோக்கி வரும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதே வேளையில் அதற்கான தீர்வை காண்பதற்கு மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளியிடம் தெரிவித்தார்.

இங்கு, களும்பாங் ஸ்ரீ டாமாய் ரிசோட்டில் நடைபெற்ற இந்தியர் சமூகத் தலைவர்கள் மேன்மைக்காகவும் மக்கள் சேவையை சிறப்பாக வழி நடத்திச் செல்வதற்கும் உரிய பயிற்சியான, இன்டக்ஸி பயிற்சிப்பட்டறையைத் தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கிய அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் பயிற்சி நிறைவின் போது, அதற்கான நற்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கிய பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு , தொடரும் மக்கள் நலச் சேவையில் இந்தியர் சமூகத் தலைவர்கள் தங்களது பணிகள் சிறப்பாக அமையப் பெற வேண்டும் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

அவரது சிறப்பு அதிகாரி திருமதி காந்திமதி நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கி உதவினார்.- Alaiolinews


சிலாங்கூர்
மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனம் சிறப்பு!- வீ.கணபதிராவ் நெகிழ்ச்சி
மலேசியா
பேரா மாநில சட்டமன்ற கூட்டத் தொடரை மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்..!
ஜொகூர்
22 ஆண்டுகள் கல்விச் சேவையில் பெருமை சேர்த்த சினாரன் இன்டென்சிப் ட்யூஷன் மையம் – எஸ்.பி.எம் 2025 தேர்வில் 53 மாணவர்கள் நேரடி A
பினாங்கு
வரலாறு கண்ட சகாப்தம் - பினாங்கு, கெடா என இரு மாநிலங்களிலும் முதல் பிரதியைப் பெற்று டாக்டர் சின்னையா சாதனை!
சிலாங்கூர்
சித்திரைப் புத்தாண்டு மலர்ச்சி யில் ஆலய வழிபாடும் மன நிறைவை அளித்தது!- மாதவன் முனியாண்டி நெகிழ்ச்சி
சிலாங்கூர்
மாநில அளவில் நியமனம் பெற்ற 55 இந்தியர் சமூகத் தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்களது சேவையை விரிவுப்படுத்த வேண்டும்- பாப்பா ராய்டு அறிவுறுத்து.
ஜொகூர்
14 pelajar, dua wanita dewasa gaduh depan sekolah didakwa di mahkamah
மலாக்கா
Pemandu bas pangku wanita atas riba dikenal pasti sebagai suami orang, giat diburu polis