Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கிள்ளான், ஏப்ரல் 14- மனதுக்கு இதமளிக்கும் அமைதி தரும் சித்திரைப் புத்தாண்டில் ஆலய தரிசனமும் வழிபாட்டின் சிறப்பும் இறைவனை வேண்டி பக்தியுடன் வணங்கும்போது நமக்குள் அது ஒரு நிறைவை தருகிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் அலை ஒளி செய்தியாளரிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பராபவ ஆண்டின் புதிய தொடக்கமாக மலர்ந்திருக்கும் சித்திரை மாதத்தின் முதல் நாளில், காலை நேரத்தில் இங்கு அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிலும் அதே வேளையில் அருள் மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்புப் பூஜையிலும் தாம் குடும்பத்துடன் பங்கேற்று இறையருளைப் பெற்றதாக அவர் கூறினார்.
பிறந்திருக்கும் புத்தாண்டில், அனைவருக்கும் எல்லா வளமும் ஆரோக்கியமும் வழங்கி அருள வேண்டும் என்று இந்த வழிபாட்டில் தாம் கோரிக்கையை முன்வைத்து வேண்டிக் கொண்டதாக கணபதிராவ் அலை ஒளியிடம் கூறினார்.

மாநில அளவில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தாம் பகிர்ந்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.-Alaiolinews

சிலாங்கூர்
கோல சிலாங்கூர், வாகீசர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மும்மொழிப் போட்டிகளில் வாகை சூடினர்- தீபன் சுப்ரமணியம் வாழ்த்து
பினாங்கு
அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் பயண விபரங்கள்
மலாக்கா
Pemandu bas ekpres, kekasih atas riba direman bantu siasatan polis
திருக்கோவில்
ஜூக்ரா கருமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி மகேஸ்வரத் திருவிழா
சிலாங்கூர்
நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பங்கு பெறுவதன் மூலம் மத நல்லிணக்கத்தை வளர்த்து கொள்ள முடியும்!- பாப்பா ராய்டு ஆலோசனை
சிலாங்கூர்
கோலலங்காட்டில் 383 பேருக்கு டெங்கி காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்- மாவட்ட சுகாதார இலாகா அறிவிப்பு.
கோலாலம்பூர்
செந்தூல் கொன்வென்ட் ஆரம்பப்பள்ளி திறந்த வெளி மண்டபத்திற்கான ரிம. 2 இலட்சம் மானியம் பிரபாகரன் வழங்கினார்