Alaioli
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சேவையாற்றி வரும் டத்தோ கருணாநிதிக்கு பதவி உயர்வு

எஸ்.எஸ்.மணிமாறன்

கோலாலம்பூர், ஏப்ரல் 18 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் இதுகாறும் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ள டத்தோ கருணாநிதி சுப்பையா  என்பவர் அதே அமைப்பின் கீழ் முக்கியப் பொறுப்புகளை வகிக்க பதவி உயர்வும் பெற்றுள்ளார்.


டத்தோ கருணாநிதி, மலேசிய ஊழல் தடுப்பு அகாடமியின் மூத்த இயக்குநராக நியமனம் பெற்றார்.  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் துவான் அசாம் பாக்கி, பதவி உயர்வுக்கான நியமனக் கடிதத்தை டத்தோ கருணாநிதியிடம் வழங்கி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.


தமது சிறப்பான சேவை , அர்ப்பணிப்பு மற்றும் தொழிலில் நேர்மை அடிப்படையில் இந்தப்பதவி உயர்வை தாம் பெற்றதாக டத்தோ கருணாநிதி பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமது கருத்தை வெளியிட்டார்.


இந்தத் துறையில் தமது வெளிப்படையான பணிகள் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.- Alaiolinews

Leave a Comment
Trending News