Alaioli
மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தும் ஆசிரியர்கள் சேவைக்கு மதிப்பளிப்போம் - தலைமையாசிரியர் இராமசாமி

எஸ்.எஸ்.மணிமாறன்


கிள்ளான் மே 23 -  மாணவர்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி  அவர்கள் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவைகளை மதிப்பளிக்கும் வகையில் சிறந்த உபசரிப்பு வழங்கி தாம் மகிழ்வித்ததாக ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் இராமசாமி நடேசன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். 


ஆசிரியர் தினத்தையொட்டி அணிச்சல் வெட்டி கொண்டாடும் எண்ணத்தில் இங்கு கிள்ளானில் புகழ் பெற்ற உணவகமான மாப்பிள்ளை உணவகத்தில் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் உணவு உபசரிப்பை நேர்த்தியாக நடத்தியதாக அவர் கூறினார்.


ஆண்டுக்கு ஒரு முறை வந்து போகும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த உபசரிப்பில் ஜெஞ்ஜாரோம் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் தமது அழைப்பை ஏற்று உபசரிப்பில் கலந்து கொண்டதாக இராமசாமி அலை ஒளியிடம் கூறினார்.-Alaiolinews


Post ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News