Alaioli
வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுந்த பொருட்களை விற்பனைக்குத் தயார் படுத்துவீர்= தீபன் சுப்ரமணியம் ஆலோசனை.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோல சிலாங்கூர் மே 30.  வீடுகளில் அடைத்து கொண்டு குவிந்து கிடக்கும் வீட்டுக்குப் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுதியுள்ள பொருட்களைச் சேகரித்து வைத்தால் அதை வாங்க வருவோரிடம் நல்ல விலையில் பேசி விற்க உரிய நடவடிக்கைகளை கோல சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து செயல்படுத்தி வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம் தகவல் தெரிவித்தார்.


புக்கிட் மெலாவத்தி சட்ட மன்றத் தொகுதியில் வசித்து வரும் சில முதிய குடும்ப பெண்களும், தமது கருத்தை ஆதரித்து வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தேவையற்ற பொருட்களை விற்பனைக்கு அனுப்பி அதன் மூலம் உரிய தொகையும் அவர்களிடமே வழங்கப் பட்டு வருவதாக அவர் கூறினார்.


முதுமை காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள், தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக தீபன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் வீடுகளில் அடைந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள்  அப்புறப்படுத்தப்பட்டு வீடும் தூய்மையாக பொலிவுறும் என்று தீபன் சுப்ரமணியம் தமது கருத்தை முன் வைத்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News