Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
கோம்பாக் மே 30 - வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் பெட்டாலிங் ஜெயாவில் மக்கள் தொகை 20 இலட்சமாக இருப்பதால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2027இல் அரசின் புதிய மருத்துவமனை 500 படுக்கைகளுடன் கட்டப்பட மாநில அரசு செயலகம் முடிவெடுத்துள்ளதாக மந்திரி.
.
பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கடந்த காலங்களில் தலைநகர் பெரிய மருத்துவமனை, அதையடுத்து உருவாக்கம் கண்ட அம்பாங் அரசு மருத்துவமனை, ஷா ஆலம் அரசு மருத்துவமனை மற்றும் யூனிவர்சிட்டி மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைகளை இதுகாறும் பயன்படுத்தி வந்துள்ள பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களுக்கு இது ஒரு இனிப்பான செ-ய்தியாக அமைவதோடு, தாமான் மேடான் வட்டாரத்தில் அரசின் புதிய மருத்துவமனை அமையவிருப்பதாக அவர் கூறினார்.
இங்கு, கோம்பாக் தொகுதி சட்டமன்ற வாக்காளர்களை நேரில் சந்தித்து அய்டில் அட்ஹா பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மந்திரி பெசார் அமிருடின் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
வளர்ச்சியை நோக்கிடும் பெட்டாலிங் ஜெயாவில் மக்களின் தேவைகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் மனிதரின் அன்றாட சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மாநில முதல்வர் அமிருடின் தெரிவித்தார்.
TAMIL SCHOOL
இமைகள் மூடினாலும் திறமைகள் மூடாது: ஆறாம் அறிவின் ஆற்றலால் உலகையே அசத்தும் இளம் சாதனையாளர் பிரித்திஷா ஷண்முகம்
போக்குவரத்து செய்திகள்
கோலாலம்பூர், சான் சாவ் லின் எல்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த விபத்தை அனைவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்= அந்தோணி லோக் எச்சரிக்கை
கோவில் விழாக்கள்
அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் திருக்குட நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது
மக்கள் பிரச்சினைகள்
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026புகையிலை ஒரு மெளன கொலையாளி!
மாநில செய்திகள்
வீட்டில் குவிந்து கிடக்கும் பயனற்ற அதே வேளையில் விற்கத் தகுந்த பொருட்களை விற்பனைக்குத் தயார் படுத்துவீர்= தீபன் சுப்ரமணியம் ஆலோசனை.
மாநில செய்திகள்
மாநில அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்கள் செயல்பட வேண்டும்= டாக்டர் குணராஜ் வலியுறுத்து.
மாநில செய்திகள்
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசின் புதிய மருத்துவமனை 2027 இல் கட்டப்படும்ந்திரி பெசார் அமிருடின்.
உடற்பயிற்சி
ஆரோக்கியமான வாழ்வியலை முன்னிறுத்திய “மாபெரும் யோகா விழா: சூரிய பிராணா"